ஹாய் இட்லி வடை ரசிகர்களுக்கு ஆஹா முருகா! எழுதிக்கொள்வது பாடு பட்டு நானும் ஒரு இட்லி வடை ரெடி பண்ணிருக்கேன் இதையும் சுவைத்து பார்த்துவிட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.இது என்றைக்கும் மனிதர்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லும் ஒரு தளமாக அமையும் என்பதை உறுதியுடன் சொல்லிக்கொள்கிறேன்.என்றும் அன்புடன் உங்கள் ஆகா முருகா!

Thursday, November 11, 2010

காமன்வெல்த் & ஸ்பெக்ட்ரம்

இந்தியர்களை இந்த அரசியல்வாதிகள் மடையர்கள் என்று நினைத்து விட்டார்கள்.அதனால் தான் ஊழல் செய்தவர்களை ராஜினாமா மட்டும் செய்ய வைத்தல் போதுமா? அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக ஜெயிலில் போட வேண்டும் .அப்போதுதான் இந்த ஜனநாயகம் நிலைத்து நிற்கும்.காமன்வெல்த்  வில்லன்  சுரேஷ் கல்மாடி பல லட்சங்களை சுருட்டிக்கொண்டார் அவரும் தற்போது ராஜினாமா  ஸ்பெக்ட்ரம்  வில்லன் ராசா  அவரும் விரைவில் ராஜினாமா தானாம் !  அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா ஆனால்  என்ன அவர்களுக்கு பெரிய இழப்பு ஒன்னும் இல்லையே ! சராசரி மனிதனுக்கு தானே இழப்பு, இவர்கள் இந்த பிரச்சினை முடிந்ததும் எதாவது ஒரு நாட்டுக்கு இன்ப சுற்றலா சென்று விடுவார்கள்.இந்த இழப்பு உனக்கும் எனக்கும் தானே இந்தியனே!

No comments:

Post a Comment