ஹாய் இட்லி வடை ரசிகர்களுக்கு ஆஹா முருகா! எழுதிக்கொள்வது பாடு பட்டு நானும் ஒரு இட்லி வடை ரெடி பண்ணிருக்கேன் இதையும் சுவைத்து பார்த்துவிட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.இது என்றைக்கும் மனிதர்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லும் ஒரு தளமாக அமையும் என்பதை உறுதியுடன் சொல்லிக்கொள்கிறேன்.என்றும் அன்புடன் உங்கள் ஆகா முருகா!

Thursday, November 11, 2010

சூடு பிடிக்கும் அரசியல்

இன்று கோடநாடு புறப்படுவதற்கு முன் ஜெயலலிதா டைம்ஸ் செய்தி சேனலுக்கு இந்த பேட்டியை அளித்துள்ளார்.
அதில்

2ஜி ஸ்பெக்டரம் ஊழல் தொடர்பான விவகாரத்தில், மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ஆ. ராசாவை நீக்க வேண்டும். அவ்வாறு அவரை நீக்கினால் கூட்டணி அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிக் கொள்ளும் என்று காங்கிரஸ் கருதுவது இயற்கையே. அத்தகைய சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக ஆதரவு தரும்."

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவு தருவதற்காக தான் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்றும், பொது வாழ்க்கையில் தூய்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மக்களவையில் உள்ள 9 அதிமுக எம்.பி.,க்கள் மற்றும் ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 18 எம்.பி.,க்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

முழு பேட்டியை இங்கே படிக்கலாம்

இன்று அல்லது நாளை கலைஞர் மன்மோகன் சிங்கிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராசா விவகாரம் மூலம் திமுகவை களங்கப்படுத்த முயற்சி என்று சில மணி நேரம் முன்பு கி. வீரமணி சொல்லியிருக்கார்.

No comments:

Post a Comment