ஹாய் இட்லி வடை ரசிகர்களுக்கு ஆஹா முருகா! எழுதிக்கொள்வது பாடு பட்டு நானும் ஒரு இட்லி வடை ரெடி பண்ணிருக்கேன் இதையும் சுவைத்து பார்த்துவிட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.இது என்றைக்கும் மனிதர்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லும் ஒரு தளமாக அமையும் என்பதை உறுதியுடன் சொல்லிக்கொள்கிறேன்.என்றும் அன்புடன் உங்கள் ஆகா முருகா!

Sunday, November 7, 2010

இரண்டு கவிதை - மானஸ்தி

Dear இட்லிவடை,

அரசியலில் இருந்து ஆன்மீகம் வரை அனைத்தையும் பரிமாறும் இ.வ. கடையில் எத்தனை நாள் தான் ஓசியிலேயே சாப்பிடுவது? இதுவரை உள்ள கணக்கைத் தீர்த்துக் கொள்ள வேண்டி இரண்டு கவிதைகள் எழுதி அனுப்பியிருக்கும் மானஸ்தி(தை) :

- சுபத்ரா


பொம்மை உலகம்
காலுடந்த கரடிப்பொம்மைக்குக்
காயம் வலிப்பதில்லை
கண்சிமிட்டும் பார்பிக்குக்
கண்ணீர் வருவதில்லை
அடித்தாலும் உடைத்தாலும்
அழுகை சிறிதுமின்றிச்
சிரித்தே கிடக்கின்றன
அத்தனை பொம்மைகளும்
எனது ஆர்வமோ
இரண்டு பொம்மைகளில்
அவை
அடிக்கடி அழுகின்றன
அரிதாகச் சிரிக்கின்றன
அழுகின்ற நேரங்களில்
அருகினில் செல்லமாட்டேன்
சில சிரிக்கின்ற சமயங்களில்
நான்
உறக்கத்தில் உறைந்திருப்பேன்
விடியும் முன்பே
விழித்துக் கொண்டு
விறுவிறுவென்று
உடுத்திக் கொண்டு
ஓடிவிடுகிறது ஒன்று.
அது போனதும்
இது வருகிறது
இழுத்துப் போர்த்திக்கொண்டு
இருட்டறையில்
கிடக்கிறது
விழித்ததும்
இது போகிறது
அது வருகிறது
பால் ஊட்டும்
பாட்டியிடம்
பலமுறை கேட்டுவிட்டேன்
இந்த
அம்மா பொம்மையும்
அப்பா பொம்மையும்
எப்போது என்னோடு
விளையாட வருமென்று
பாவம் அவளுக்குத்
தெரியவில்லை போலும்
பாவமாகப் பார்க்கிறாள்
என்னையும்
என் பொம்மைகளையும்.

கல்வி

மனனம் செய்தவை
மறந்த பின்பும்
மனதிற்குள்
மிச்சம் இருப்பது.
மனிதம் என்னும்
விதையை விதைத்து
மனிதனில்
இறைவன் சமைப்பது
கல்வி கரையில்லாதது
இன்றோ
கல்வி
காசில்லாமல் இல்லாதது
அன்று
எடுத்தவன் கொடுத்தான்
கல்வியை.
இன்று
கொடுத்தவன் எடுக்கிறான்
காசை..

கலி முத்தி போனதுக்கு இதுவே சாட்சி - பெண்கள் கவிதை(?) எழுத ஆரம்பித்துவிட்டார்கள் :-)

No comments:

Post a Comment