ஹாய் இட்லி வடை ரசிகர்களுக்கு ஆஹா முருகா! எழுதிக்கொள்வது பாடு பட்டு நானும் ஒரு இட்லி வடை ரெடி பண்ணிருக்கேன் இதையும் சுவைத்து பார்த்துவிட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.இது என்றைக்கும் மனிதர்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லும் ஒரு தளமாக அமையும் என்பதை உறுதியுடன் சொல்லிக்கொள்கிறேன்.என்றும் அன்புடன் உங்கள் ஆகா முருகா!

Sunday, May 8, 2011

மன்மோகன் சிங்கும், கருணாநிதியும் பேசிக் கொள்கிறார்கள்


மன்மோகன் : கலைஞர்ஜி உண்மைய சொல்லுங்க, அந்த 2 லட்சம் கோடி எங்க?

கலைஞர் : சொல்றேன்பா, இவ்வளவு நாளா என் மனசில பூட்டி வச்சிருக்கற குடும்ப ரகசியத்தை சொல்றேன், இது கடுகளவு வெளிய கசிஞ்சாலும் என்ன நீங்க உயிரோடவே பார்க்க முடியாது..!

மன்மோகன் : ஒக்கே சொல்லுங்க..

கலைஞர் : ரொம்ப நாளா கனிமொழிய ராசா வச்சிருக்கறதா ஊருக்குள்ள ஒரு வதந்தி, அத கேட்டு கோவப்பட்ட நான் அவன் சட்டைய புடிச்சி, ஏண்டா என் மகள நீ வச்சிருக்கியாடா ன்னு கேட்டேன், அவன் சிம்பிளா ஒரு பதில சொன்னான்

மன்மோகன் : என்ன பதிலு?

கலைஞர் : கனிய நான் வெச்சுக்கறேன், ’’மணி’’ய நீ வெச்சுக்கன்னு சொன்னான்.

மன்மோகன் ; அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?

கலைஞர் : பட் அந்த டீலிங் எனக்கு புடிச்சிருந்த்த ு, நானும் ஒத்துக்கிட்டேன்

Saturday, April 16, 2011

ரஜினி பேச்சு?-வறுத்தெடுத்த கருணாநிதி!

தேர்தலில் வாக்களிப்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் வாக்களிக்கலாம். ஆனால் அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம்.

ஆனால் தமிழ் சினிமாவில் உச்ச அந்தஸ்தை 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்துவரும், ஏதோ ஒரு கட்டத்தில் முதல்வர் பதவியில் அமர்ந்துவிடமாட்டாரா என ரசிகர்களால் நம்பப்படும் (இன்னமும்) ரஜினிகாந்த், இந்த விஷயத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சறுக்கியிருக்கிறார்.

நேற்று அவர் வாக்களித்த போது, எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்ற ரகசியம் அம்பலமாகிவிட்டது. பொதுவாக அவர் வாக்களிக்க வரும்போது, ரசிகர்களை மிஞ்சும் அளவுக்கு மீடியாக்காரர்கள் மொய்த்துக் கொள்வார்கள். நேற்றும் அப்படித்தான் நடந்தது.

அவர் வாக்களிக்கும் இடத்துக்குச் சென்றபோதும் காமிராக்கள் துரத்தின. அவர்களை அப்புறப்படுத்த ரஜினியும் முயற்சிக்கவில்லை. அவருடன் வந்திருந்தவர்களும் முயற்சிக்கவில்லை. இதனால் அவர் எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்பதை அப்படியே தெள்ளத் தெளிவாகப் படம்பிடித்துள்ளனர் புகைப்படக்காரர்களும் தொலைக்காட்சி கேமராமேன்களும். அவர் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை!

ஓட்டுப் போட்ட கையோடு, வாக்குச் சாவடியில் எதுவும் பேசாமல் நேராக வீட்டுக்குப் போனவரை, ஆங்கிலச் சேனல்கள் வாயைப் பிடுங்க, அவரும் ஊழல், விலைவாசி, விவசாயிகள் நலன், அடுத்த முதல்வர் என்றெல்லாம் அடித்துவிட்டார்.

விஷயம் அத்துடன் முடிந்துவிடவில்லை. அதன்பிறகுதான் ஆரம்பித்தது. ரஜினி வாக்களிப்பதை படம் பிடித்தவர்களில் சிலரது ஒளிநாடாக்கள் கோபாலபுரத்துக்கும், முக்கிய தொலைக்காட்சி சேனல்களுக்கும் போய்ச் சேர, ஆட்சி மேலிடம் ஏக அப்செட்.
இந்த நிலையில், நேற்று மாலையே முதல்வர் கருணாநிதியுடன் பொன்னர் சங்கர் பார்க்க வேண்டிய சூழல் ரஜினிக்கு. ரஜினி ஓட்டுப் போட்ட விவகாரம் முதல்வருக்கு வெட்ட வெளிச்சமாகிவிட்டதால், ரஜினி வருவாரா மாட்டாரா என்று எல்லோரும் காத்திருந்தார்கள். ஒருவழியாக வந்தார். ஆனால் முதல்வருடன் அவரால் சகஜமாக இருக்க முடியவில்லை என்கிறார்கள் முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகள்.

முதல்வருடன் இருந்த ஒரு முக்கிய அதிகாரி நம்மிடம் இப்படிச் சொன்னார்: "படம் ஆரம்பிக்குமுன், அங்கு நின்றிருந்த வைரமுத்துவிடம், 'நீங்களெல்லாம் இந்த மனிதருக்கு (ரஜினிக்கு) எந்த அளவு பரிந்து பேசியிருக்கிறீர்கள். ஆனால் இவர் செய்திருக்கிற வேலையைப் பார்த்தீர்களா... இவரது நம்பகத்தன்மை தெரிகிறதா.. வாக்களிப்பது அவர் இஷ்டம். ஆனால் அதைப் படம்பிடிக்கவும் அனுமதித்திருக்கிறார்கள். அடுத்து அவர் அளித்த பேட்டி.. விலைவாசி நாடெங்கும் உள்ள பிரச்சினை. ஆனால் நமது அரசு அதைத் தீர்க்க எடுத்த முயற்சிகள் தெரியாதா.. விவசாயிகளுக்கு இந்த அரசை விட அதிகம் செய்தது யார்.... இதெல்லாம் சரிதானா?", என்று முதல்வர் கேட்க, இருக்கையில் உட்கார முடியாமல் நெளிந்த ரஜினி, படம் முடிந்த கையோடு, காரில் ஏறிப் பறந்தாராம்!

ஆட்சியாளர்களிடம் மிகுந்த நெருக்கமாக இருந்த ரஜினியின் இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம், அந்த 'பத்திரிக்கை ஆசிரியரான அரசியல் தரகர்' கம் விமர்சகர்தான் என்றும் உடன் படம் பார்த்தவர்களிடம் கமெண்ட் அடித்தாராம் முதல்வர்!

ஏற்கெனவே 2004ம் ஆண்டு தேர்தலில் பாமக மீதான கோபத்தில், அதிமுக- பாஜக கூட்டணிக்கு வாக்களித்தேன் என வெளிப்படையாகக் கூறி ரஜினி சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
கருணாநிதியிடமும் ஜெயலலிதாவிடமும் நீங்கள் கேட்க விரும்பும் ஐந்து கேள்விகளை எழுதி அனுப்புங்கள் என்று என் இணைய தள வாசகர்களைக் கேட்டிருந்தேன். நூற்றுக் கணக்கில் கேள்விகள் வந்து குவிந்துவிட்டன. அவற்றிலிருந்து தொகுத்து சில கேள்விகளை இங்கே நாகரிகமான மொழியில் தந்திருக்கிறேன். இப்போதைய ஆளும் கட்சி என்பதால் கருணாநிதிக்கு 20 கேள்விகள். ஜெயலலிதாவுக்கு 15 கேள்விகள். இருவருக்கும் பொதுவாக 8 கேள்விகள். பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிட சளைக்காத இருவரும், இந்தக் கேள்விகளுக்கு நேரடியாக பதில் தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.

ஜெயலலிதாவுக்கு:

1. உங்களை விட்டால் கட்சியில் வேறு தலைவரே இல்லையே? இப்படி ஒரு கட்சி நடத்துவது சரியா?

2. சட்டமன்றக் கூட்டத்துக்கே நீங்கள் போகவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக ஒழுங்காக வேலை பார்க்காத உங்களை ஏன் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் ?

3. யாருமே நெருங்கமுடியாத தலைவராக உங்களை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மனிதர்களை சந்திக்க உங்களுக்குப் பிடிக்காவிட்டால், அரசியலிலிருந்து ஓய்வு பெற்று நிம்மதியாக தனியே வாழவேண்டியதுதானே?

4. அ.தி.மு.கவை சசிகலா குடும்பம்தான் ஆக்ரமித்து நடத்திக் கொண்டிருக்கிறது. இதை மாற்ற ஏதாவது திட்டம் உண்டா?

5. கூட்டணிக் கட்சிகளை மதிக்காமல் இஷ்டப்படி கூட்டணிகளை உடைப்பது உங்கள் வழக்கம். இந்த அணுகுமுறை மாறுமா?

6. இலவசங்கள் தவிர, உங்கள் பத்தாண்டு ஆட்சியில் சமூக, பொருளாதார, சுற்றுச் சூழல் தொடர்பாக ஏதாவது உருப்படியான நடவடிக்கைகள் செய்தது உண்டா?

7. கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியின் முறைகேடுகளைக் கண்டித்து எத்தனை போராட்டங்களை நீங்கள் தலைமை ஏற்று நடத்தினீh;கள்?

8. ஒரு பெண்ணாக இருந்தும் ஏன் பெண்களுக்கு 35% சீட் தரவில்லை?

9. சகமனிதனை – பெண்ணாக / ஆண்ணாக இருந்தாலும் – காலில் விழச்செய்து புகைப்படம் எடுத்து வெளியிடும், அருவருப்பான கலாச்சாரத்தை / மனநிலையை எப்போது விடப் போகிறீர்கள்?

10. காஞ்சி சங்கராசாரியார் மீதான வழக்கு கடந்த தி.மு.க. ஆட்சியில் எவ்வாறு திசை திருப்பபட்டது ? அதை தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள்?

11. மாதம் முழுவதும் கூலி வேலை செய்யும் வயதுவந்த பெண்களின் வலி உங்களுக்கு தெரியுமா? பள்ளி / ரேசன் கடை மூலம் வயதுவந்த ஏழைப் பெண்களுக்கு நாப்கின்களை இலவசமாக (அ) குறைந்த விலைக்கு வழங்கும் திட்டத்தை நீங்கள் செயல்படுத்த சிந்திக்காதது ஏன் ?

12. மக்களை பிச்சைகாரர்களாக ஆக்கும் இலவசங்களை தி.மு.க வுக்கு போட்டியாக நீங்களும் அறிவிப்பது ஏன்?

13. தமிழினம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டபோது மக்களை திரட்டி போராடி ஈழ பொதுமக்களை காப்பாற்ற முயலாதது ஏன்?

14. (மக்களின் உணர்வு அறிந்தும்) இனியாவது ஊழலளற்ற ஆட்சி தருவேன் என்ற உறுதி மொழி உங்கள் தேர்தல் அறிக்கையில் இல்லாமல் போனது ஏன்?

15. கருணாநிதி குடும்ப அரசியலை இவ்வளவு வசைபாடும் நீங்கள் அ.தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் கட்சியிலும் ஆட்சியிலும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்திரின் தலையீடு இருக்காது என உறுதி கூற முடியுமா?



கருணாநிதிக்கு:

1. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்களுக்கும் சுயமரியாதை, வாழ்வுரிமை, தொழில் செய்யும் உரிமை, சொத்துரிமை எல்லாம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா ?

2. பணத்துக்காகத்தான் மது விற்பனையை அரசின் மூலம் செய்கிறீர்கள் என்றால், நாளைக்கு பணம் வரும் என்பதற்காக விபசார விடுதிகளையும் உங்கள் அரசே நடத்துமா?

3. உங்கள் மனைவி திருநள்ளாறு பரிகார பூசைக்கு செல்வதாக செய்தி வருகிறது. மனசாட்சிப்படி சொல்லுங்கள்,. நிஜமாகவே நீங்கள் நாத்திகர்தானா?

4. முதல்வராக சிறப்பாக ஆட்சி புரிந்ததாக நம்பிக்கை இருந்தால், ஏன் உங்கள் கட்சியே தனித்து எல்லா தொகுதிகளிலும் போட்டி இட்டிருக்கக் கூடாது? அந்த நம்பிக்கை இல்லாதது ஏன் ?

5. பெயருக்கு ஒரு பட்டப் படிப்பு படித்துவிட்டு, சுய சம்பாத்தியம் இல்லாமல், கோடிக் கணக்கில் செலவு செய்து படம் எடுக்க உங்கள் பேரன்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது?

6. உங்கள் குடும்ப பிரச்சனையில் 3 பேரை தீயிட்டு கொளுத்தியதை நினைத்தபோதும், உங்கள் இதயம் இனிக்கிறதா?

7. தமிழக அரசிற்கு நீங்கள் ஏற்றி வைத்துள்ள பெரும் கடன் சுமையை எப்படி திருப்பிச் செலுத்த்ப் போகிறீர்கள் ? அதற்கு ஏதாவது குறிப்பான யோசனை உண்டா?

8. இலவச ஆயுள் காப்பீட்டு திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை அதற்கு பதில் ஏற்கனவே இலவசமாக இருக்கும் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த செலவிடாதது ஏன் ? தனியாருக்கு லாபம் சேர்த்துத் தரவா ?

9. ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு துணைவியுடனும் பகிரங்கமாகக் குடும்பம் நடத்தும் உங்கள் வாழ்க்கை முறை தமிழ்க் கலாசாரத்துக்கு விரோதமானது. தவறான முன்னுதாரணம் என்பதை உணர்ந்து எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா? என்னைப் பின்பற்றவேண்டாம் என்று இளைஞர்களிடம் வருத்தம் தெரிவிக்கும் நேர்மை உங்களுக்கு உண்டா?

10. கூவத்தை தூய்மையாக்குவேன் என்று 25 வருடம் முன்பே திட்டம் போட்டீர்கள். அந்த பணம் என்னவாயிற்று ? ஏன் இப்போது மறுபடியும் திட்டம் போடுகிறீர்கள்? இது கூவத்துக்காகவா? உங்கள் நலனுக்காகவா?

11. 25 வருடம் முன்பே பிச்சைக்காரர்களை ஒழித்துவிட்டேன் என்று அறிவித்தீர்கள். இப்போது ஏன் எல்லா ஊர்களிலும் பிச்சைக்காரர்கள் திரிகிறார்கள் ? ஏன் ஆயிரக்கணக்கான்வர்கள் தெருக்களில் வசிக்கிறார்கள் ? ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்?

12. ஐந்தாண்டுகளாக வெளி நாட்டில் வாழ்கிறேன். ஒரு அரசு ஊழியருக்கோ ஒரு காவல் அதிகாரிக்கோ ஒரு தம்படிக் காசு கூட லஞ்சமாகக் கொடுத்ததில்லை. அவர்கள் கேட்டதும் இல்லை. இங்கே வந்த சில தினங்களிலேயே ஒவ்வொரு இடத்திலும் என்னிடம் லஞ்சம் கேட்கிறார்களே, இதற்கு நீங்கள்தானே பொறுப்பு ?.

13. மின் வெட்டை தடுக்க 5 ஆண்டுகளில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

14. அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக சொன்னீர்களே ஏன் செய்யவில்லை?

15. தமிழினம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டபோது பதவிக்கு சண்டையிட்ட உங்கள் கட்சியை நம்பி எப்படி வாக்களிப்பது? 2008ல் நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்து மத்திய அரசிலும் பங்கு பெற்றிருக்கவில்லை எனில் ஈழப்பிரச்சினையை எப்படி கையாண்டிருப்பீh;கள்?

16. உங்கள் ஊழல் பற்றிய சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நூலகங்களில் இருந்து எடுத்தது ஏன்?

17. தொகுதிப் பங்கீடு மற்றும் அமைச்சர் பதவி தன் வாரிசுகளுக்கு வாங்குவதற்கு தவிர நீங்கள் டெல்லி சென்றது எத்தனை முறை? எதற்காக?

18. பாராட்டு விழாக்கள் , சினிமா கலை நிகழ்ச்சிகள், நடிகையின் திருமணம் போன்றவற்றிற்கு ஓடோடி செல்லும் நீங்கள் , எத்தனை முறை இறந்து போன மீனவர் குடும்பங்களுக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறீர்கள்?

19. பல வருடங்களாக கட்சியிலிருந்து உழைத்த தி.மு.க. தொண்டர்களை விட, தயாநிதி மாறனும் அழகிரியும், கனிமொழியும் மக்களவை உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும் ஆவதற்கு என்ன தகுதி ?

20. உங்கள் குடும்பத்தினருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் , மணல் கொள்ளை, திரைப்படத்துறை முழுமையான ஆக்ரமிப்புக்கும் உள்ள தொடர்புகளை உங்கள் மனசாட்சியால் மறுக்க முடியுமா?



இருவருக்கும்:

1. விவசாயம் லாபமில்லா தொழிலாக போய்விட்டது. தனியார் தரிசு நிலங்கள் அதிகரித்து வருகின்றன. அவை சில காலம் கழித்து பிளாட்டுகளாக மாறி வருகின்றன. விவசாய கூலியும், இடுபொருட்கள் செலவும் அதிகரித்துவிட்டது. விவசாய விளைபொருட்களின் விலையை விவசாயி தீர்மானிக்க முடியவில்லை. பதுக்கல் வியாபாரிகளே அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். இதற்கு என்ன தீர்வு வைத்திருக்கிறீர்கள்?

2. முன்பெல்லாம் உள்கட்டமைப்பு மூலதன செலவுகளுக்கு பட்ஜெட்டிலிருந்து பணம் ஒதுக்கீடு செய்யப்படும். தற்போது உலக வங்கியிலிருந்தும், நபார்டிலிருந்தும் கடன் வாங்கும் வழக்கம் வந்துவிட்டது. இது ஒரு நல்ல போக்கா?

3. பத்திர பதிவு துறை, போக்குவரத்து துறை, காவல் துறை, பொது பணித்துறை இந்த நான்கு துறைகளில்தான் அதிகம் லஞ்சம் புழங்குகிறது. இதை கனிசமாக குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்?

4. அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் ?

5. சட்டமன்றத்தில் ஜால்ரா பேச்சுகளை அடியோடு ஒழித்துவிட்டு அசல் பிரச்சினைகளைப் பற்றி ஆழமான விவாதங்களை நடக்கச் செய்யாமல் உங்கள் கட்சியினரைக் கெடுத்து வைத்திருப்பதை எப்போது மாற்றுவீர்கள் /

6. தலைமையை வைத்துத்தான் தொண்டர்கள் இருப்பார்கள். அப்பழுக்கற்ற அரசியல்வாதி, கண்ணியமான அரசியல்வாதி என்ற நற்பெயரை சம்பாதிக்க ஏன் இதுவரை முயற்சிக்க வில்லை?

7. ஆயிரக்கணக்கான குடும்பங்களை அரசு மதுக்கடைகள் நாசமாக்கிக் கொண்டிருக்கின்றன. இதைப் பற்றி உங்களுக்கு அக்கறையே கிடையாதா?

8. இவ்வளவு தவறையும் பண்ணிட்டு மறுபடியும் மறுபடியும் மக்கள் முன்னாடி வந்து நிக்கிறதுக்கு
உங்களுக்கு வெட்கமாவே இருக்காதா?

Thursday, April 7, 2011

Issued in Public Interest


அண்ணா ஹஸாரே

விளையாட்டு முதல் விஞ்ஞானம் வரை ஊழல் தலைவிரி கோலமாக ஆடும் தேசமாக பாரதம் மாறி வருகிறது. ஊழலுக்கெதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பிலிருக்கும் அரசாங்கமும், அதன் தலைமையும், அது பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது என அப்பாவி வேஷம் போட்டு வருகிறது. ஆனால் மேடைகள் தோறும், ஊழலை ஒழித்தாலொழிய எங்கள் அரசாங்கத்தின் ஜென்மம் சாபல்யம் பெறாது என்ற ரீதியில் அரசாங்கத்தை ஆட்டுவிப்பவர்கள் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் முதுபெறும் சமூக சேவகரான அன்னா ஹஸாரே, ஜன் லோக்பால் என்ற ஊழலுக்கெதிரான மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமென தில்லியின் ஜந்தர் மந்தரில் சாகும்வரை உண்ணா நோன்பு துவங்கியுள்ளார். இதற்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி, சீர்திருத்தவாதியான ஸ்வாமி அக்னிவேஷ் மற்றும் மகஸேசே விருது பெற்ற சந்தீப் பாண்டே போன்றோர்கள் ஆதரவளித்து, உண்ணா நோன்பில் பங்கேற்றுள்ளனர். மேலும் பொதுமக்களுடைய பெருவாரியான ஆதரவும், மீடியா கவனமும் பெற்று இந்த உண்ணா விரதம் அரசாங்கத்தின் கவனத்தைக் கலைத்துள்ளது.



ஜன் லோக்பால்:

ஜன் லோக்பால் என்ற இந்த மசோதாவின் சூத்ரதாரி கர்நாடகத்தில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுவரும் லோகாயுக்தா அமைப்பின் நிறுவனரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே மற்றும் பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ப்ரசாந்த் பூஷன் போன்றோர் ஆவர். இம்மசோதாவின் நோக்கம், ஜன் லோக்பால் அமைப்பின் மூலம் ஊழல் புகார்களை உடனுக்குடன் (ஒரு வருடத்தில்) விசாரித்து முடித்து, சம்பத்தப்பட்ட நபருக்கு தண்டனை வாங்கித் தருவது, ஊழலின் மூலம் ஈட்டிய சொத்துக்களை முடக்குவது, போன்றவை ஆகும். தவிர, ஊழலில் ஈடுபட்டவர் மந்திரியாகவோ அல்லது முக்கிய அரசாங்க அதிகாரியாகவோ இருப்பின், அவர் மீது வழக்குத் தொடர அரசாங்க அனுமதி தேவையில்லை என்பதுவும் இம்மசோதாவின் முக்கிய அம்சமாகும். இம்மசோதாவை பாராளுமன்றத்தில் ஏற்று நிறைவேற்ற வேண்டுமென்பதுதான் இப்போதைய அன்னா ஹஸாரே தலைமையிலான உண்ணா நோன்பிருப்பவர்களின் முக்கியக் கோரிக்கை.

ஊழலுக்கெதிராகப் பிறப்பெடுத்துள்ள தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் ஏற்கனவே ஊழலை ஒழிக்க லோக்பால் என்ற மசோதாவை பாராளுமன்றத்தில் கொணர்ந்து நிறைவேற்றியும் உள்ளது. ஆனால் அதிலுள்ள ஓட்டைகளின் காரணமாக அது செயல்படுத்த முடியாத ஒரு சட்டம் என்பது அதை எதிர்க்கும் ஹஸாரே போன்றோர் கூறும் காரணம்.

அரசாங்கத்தில் லோக்பால் மசோதா மூலம் ஒரு மந்திரியோ அல்லது அரசாங்க அதிகாரி தொடர்புடைய ஊழலையோ வெளிக் கொணர்ந்து, விசாரித்து தண்டனை பெற்றுத் தர வேண்டுமானால், பொதுமக்கள் முதலில் லோக்சபா அல்லது ராஜ்யசபாவின் சபாநாயகரிடம் ஊழல் தொடர்பான புகார் மனுவை அளிக்க வேண்டும். சபாநாயகர் அம்மனுவைப் பரிசீலித்து, அது ஏற்புடையது என்றால் லோக்பால் கமிட்டிக்கு அனுப்புவார். பின்பு அது விசாரிக்கப்பட்டு, தண்டனையளிக்கப்படும்(???). இயல்பாகவே சபாநாயகர் ஆளுங்கட்சியையோ அல்லது கூட்டணியையோ சார்ந்த நபராக இருப்பதால், ஆளுங்கட்சி அல்லது அதற்கு வேண்டிய அதிகாரி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு சபாநாயகர் எடுத்துக் கொள்வது சந்தேகமே. அதற்கு மீறி கமிட்டிக்கு அனுப்பப்பட்டாலும் விசாரணை ஆண்டுகள் கணக்கில் எடுத்து, மறக்கப்பட்டு, பொதுமக்களின் பணமும் விசாரணை என்ற பெயரால் வீணடிக்கப்படும். எனவே அந்த லோக்பால் சட்டம் ஏற்புடையதல்ல என்பதே ஹஸாரே மற்றும் குழுவினரின் வாதம்.

ஜன் லோக்பால் மசோதாவின் அம்சங்கள்:

* மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும், ஒவ்வொரு மாநிலத்திலும் லோகாயுக்தா அமைப்பும் நிறுவப்படும்.

* உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் போன்று இவ்வமைப்பும் சுதந்திரமான அமைப்பாகும். இதன் விசாரணையில் அரசாங்கமோ அல்லது அதிகாரிகளின் குறுக்கீடோ இருக்காது.

* மற்ற வழக்குகள் போல் பல மாமாங்கங்களாக விசாரணை நடைபெறாமல், ஜன் லோக்பால் அமைப்பின் மூலம் எந்தவொரு வழக்கு விசாரணையும் ஒரு வருடத்தில் முடிக்கப்பட்டு, அடுத்த ஓராண்டில் வழக்கும் முடிக்கப்பட்டு, இரண்டாண்டுகளுக்குள் தொடர்புடைய நபருக்கு தண்டனையும் அளிக்கப்பட்டு விடும்.

* ஊழல் மூலம் ஈட்டப்பட்ட, அரசாங்கத்திற்கு நட்டமேற்படுத்தப்பட்ட தொகை தண்டனைக்காலத்தில் மீட்கப்படும்.

* பொது மக்களுக்கு எந்தவொரு அரசாங்க அலுவலகத்தில் குறிப்பிட்ட பணி முடித்துக் கொடுக்கப்படா விட்டாலோ அல்லது தாமதப்படுத்தப்பட்டாலோ, தொடர்புடைய அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவ்வபராதம் மனுதாரருக்கு நிவாரணமாக அளிக்கப்படும்.

* ஆக உங்களுடைய ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்றவை பெறுவதில் மெத்தனமோ, தாமதமோ ஏற்படுத்தப்பட்டாலோ, நீங்கள் இவ்வமைப்பை அணுகலாம். இதன் மூலம் ஒரு மாதத்திற்குள் உங்களுக்கு அது கிடைப்பதோடு மட்டுமல்லாமல், நிவாரணமும் பெற்றுத் தரப்படும். தவிர தரமற்ற சாலைகள், பஞ்சாயத்து அளவில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள் போன்றவற்றையும் நீங்கள் இவ்வமைப்பின் கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம். இரண்டாண்டுகளுக்குள் தொடர்புடைய குற்றவாளி தண்டனை பெறுவார்.

* லோக்பால் அமைப்பின் உறுப்பினர்கள் அரசாங்கம் மூலம் நியமிக்கப்பட மாட்டார்கள். நீதிபதிகள், பொதுமக்கள் போன்றவர்கள் மூலம் மிகவும் வெளிப்படையான நியமனம் இருக்கும். ஆகவே ஊழல் பேர்வழிகளே ஊழலை ஒழிக்கப் புறப்படும் அவலங்கள் தவிர்க்கப்படும்.

* ஜன் லோக்பால் உறுப்பினர்களே ஊழல்வாதிகளாக இருப்பின், அவர்கள் மீதான புகார்கள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்படுவர்.

* புகார் அளிப்பவர்கள் மற்றும் புகாரில் தொடர்புடையவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.

மேற்கண்ட எந்தவொரு அம்சமும் அரசாங்கத்தின் தற்போதைய லோக்பால் மசோதாவில் இல்லை. இது போன்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, கொண்ட நோக்கில் பழுதின்றி செயல்பட்டால், நிச்சயம் இந்தியா ஊழலற்ற தேசமாக மாறும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. தவிர, லோகாயுக்தா அமைப்பு கர்நாடக அமைச்சர்கள் கண்களில் விரலை விட்டு ஆட்டுவதால், இவ்வமைப்பு நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்து என்பதிலும் ஐயமில்லை. ஆக இந்தியர்கள் உலகக் கோப்பை வெற்றியை ஒற்றுமையோடு வரவேற்றுக் கொண்டாடியதைப் போல், ஹஸாரேவின் உண்ணா நோன்பிற்கும் ஆதரவளித்து, அவரது உயர்ந்த நோக்கம் ஈடேற ஆதரவளிப்போம்.
லோக்பால் பற்றி யாரும் அவ்வளவாக பேசுவதில்லை. பேசாமல் லோக்பால் என்பதை கிரிக்கெட் பால் என்று வைத்தால் பலரும் பேசுவார்கள் என்று நம்புகிறேன். அண்ணா ஹஸாரே முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள். வெற்று பெற்றால் இவர் தான் பாரத ரத்தனா!

அடுத்த காந்தி


அண்ணா ஹஸாரேவின் ஊழலுக்கெதிரான உண்ணா விரதப் போராட்டம், இதை எழுதும் தறுவாயில் மூன்றாவது நாளை எட்டிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சி அமைப்புகள், இன்ன பிற சமூக அமைப்புகளின் ஆதரவு, என பல தரப்பிலிருந்தும் அன்னா ஹஸாரேவின் ஊழலுக்கெதிரான முன்னெடுப்பிற்கு ஆதரவு பல்கிப் பெருகிக் கொண்டிருப்பது மத்திய சர்க்காரை ஒருவித அச்சத்திற்காட்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாட்டின் நல்லதேதும் நடக்கப் பொருக்காத காங்கிரஸ் அன்னா ஹஸாரேவின் உண்ணா விரதத்திற்குப் பின்னால் பாஜக இருப்பதாகவும், அன்னா ஹஸாரே ஒரு ஆர் எஸ் எஸ் கைக்கூலி என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த ஒரு வரிக்காகவே ஆர் எஸ் எஸ் அமைப்பு அதன் ஆயுட்காலம் முழுவதும் காங்கிரஸிற்கு கடமைப் பட்டுள்ளது. இவ்வாறு ஹஸாரெவைச் சாடியதன் மூலம், ஆர் எஸ் எஸ் அமைப்பு ஊழலுக்கெதிரான ஒரு அமைப்பு என்பதை காங்கிரஸ் மறைமுகமாக, அறிந்தோ அறியாமலோ ஒப்புக் கொண்டுள்ளது. இந்த வெற்று அரசியல் ஒருபுறம் இருக்கட்டும்.


இரண்டாம் நாளாக உண்ணா நோன்பு தொடரும் நிலையில், அன்னா ஹஸாரே, சுருக்கமாகவும், நறுக்குத் தெறித்தாற் போலும், பிரதமர் மன்மோஹன் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதன் சாரம்..

"ஊழலைக் களைவதற்குண்டான முயற்சிகளை விடுத்து, இந்த அரசாங்கம் எங்களது நோக்கத்திலும், அமைப்பிலும் பழுது காண்பது வருத்தமளிக்கிறது. நான் உண்ணா நோன்பிறுப்பதற்காக வற்புறுத்தப்பட்டேன் என்று சில தரப்பிலிருந்து கேள்விப் படுவது என்னையும், எனது அறிவையும் அவமதிப்பது போன்றதாக இருக்கிறது.நம்மிடம் மொத்தம் எட்டு வகையான லோக்பால் மசோதாக்கள் இருக்கின்றன. ஆனால் பிரதமராகிய நீங்கள் இதில் ஒன்றைக் கூட அமல்படுத்த முனையவில்லை. தயவு செய்து தேசத்தைத் தவறான பாதையில் வழிநடத்திச் செல்ல வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் (அரசாங்கம்) இதற்கான சில முன்னெடுப்பகளை எடுத்து வருவதாகக் கூறியுள்ளீர்கள். ஆனால் இதற்கான சட்டவடிவுகளை வடிவமைப்போரில் பெரும்பாலானோர் சிறையில் இருக்க வேண்டியவர்கள். இவர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை நம்ப வேண்டுமென்று நினைக்கிறீர்களா? என்னுடைய சூழலில் நீங்கள் இருந்தால், நீங்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை நம்புவீர்களா?

நான் ஒன்றும் குழந்தையல்ல, எனவே என்னுடைய அறிவின் விஸ்தீரணத்தை சந்தேகிக்க வேண்டாம். என்னுடைய முடிவுகள் அனைத்துமே சுயமானவை. என்னுடைய முந்தைய மூன்று கடிதங்களுக்கு சோனியாவிடமிருந்தோ அல்லது பிரதமரிடமிருந்தோ எவ்விதமான பதிலும் இல்லை. அதனாலேயே சாகும் வரை உண்ணா விரதம் என்ற முடிவிற்கு வர வேண்டியிருந்தது., என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
( முழு கடிதம் கீழே )

இவ்வாறு இந்த ஊழலுக்கெதிரான போராட்டத்திற்கு ஆதரவு பெருகிக் கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் தரப்பில் இப்போராட்டத்தை எவ்வாறு முடக்கி மூட்டை கட்டலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறது. வீரப்ப மொய்லி கூறுகையில், ஹஸாரேவின் சில யோசனைகளை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார். காங்கிரஸின் மழுப்பல் நாயகன் கபில் சிபல்(2G, CWG ஊழலே நடக்கவில்லை என்று சொன்னவர்), அன்னா ஹஸாரேவின் லோக்பால் மசோதாவிற்கு பற்களே இல்லை என்கிறார். டெண்டிஸ்டாகப் போயிருக்க வேண்டியவர். ஊழலை ஓழிப்போம் என்று சொல்வதற்கு இவர்களுக்கு முதலில் வாயே கிடையாது, பிறகு என்ன பற்களைப் பற்றிய பேச்சு?

ஊழலுக்கெதிரான அமைச்சர்கள் குழுவில் மத்திய அமைச்சர் ஷரத் பவார் இடம்பெற்றிருப்பதை ஹஸாரே விமர்சித்ததைத் தொடர்ந்து, ஷரத் பவார் அப்பொறுப்பிலிருந்து விலகவிருப்பதாகத் தெரிகிறது. தவிர, ஹஸாரேவே ஊழல் புகார்களுக்காட்பட்டிருப்பவர் என்று வேறு தேசியவாத காங்கிரஸ் பதிலடியாக விமர்சித்துள்ளது.

எது எப்படியோ, ஊழலுக்கெதிராக ஒரு மசோதாவை நிறைவேற்றி, காங்கிரஸ் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள முனையாது என்றே தோன்றுகிறது. ஆனாலும் ஹஸாரேவிற்கு வலுக்கும் ஆதரவு, அசைக்க முடியாத அம்மிக்கல்லை ஆடிக் காற்று நகர்த்தியது போல, ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் உண்டு.

அன்னா ஹஸாரேவிற்க்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு அவரை சந்திக்க முயன்ற உமா பாரதி மற்றும் ஓம் பிரகாஷ் செளதாலா போன்றோர், ஹஸாரேவின் ஆதரவாளர்களால திருப்பியனுப்பப்பட்டனர். அரசியல்வாதிகளின் நிழல் பட்டாலே மக்கள் திசை திரும்பி, கொண்ட நோக்கிலிருந்து மாறிவிடுவர் என்பது ஹஸாரேவின் ஆதரவாளர்கள் இதற்கு விளக்கமளித்துள்ளனர். நல்ல முன்னேற்றம் !

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மமே வெல்லும் எனும் கீதாசாரத்திற்கிணங்க, ஹஸாரேவின் முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து அவருக்கு நமது நல்லாதரவை நல்குவோமாக.

- ஸ்ரீவத்ஸன்
[ Dear Dr. Singh,

I have started my indefinite fast at Jantar mantar. I had invited you also to fast and pray for a corruption free India on 5th April. Though I did not receive any reply from you, I am hopeful that you must have done that.

I am pained to read and hear about government's reaction to my fast. I consider it my duty to clarify the points raised on behalf of Congress party and the government by their spokespersons, as they appear in media:

1. It is being alleged that I am being instigated by some people to sit on this fast. Dear Manmohan Singh ji, this is an insult to my sense of wisdom and intelligence. I am not a kid that I could be "instigated" into going on an indefinite fast. I am a fiercely independent person. I take advice from many friends and critics, but do what my conscience directs me to do. It is my experience that when cornered, governments resort to such malicious slandering. I am pained that the government, rather than addressing the issue of corruption, is trying to allege conspiracies, when there are none.

2. It is being said that I have shown impatience. Dear Prime Minister, so far, every government has shown complete insensitivity and lack of political commitment to tackling corruption. 62 years after independence, we still do not have independent and effective anti‐corruption systems. Very weak versions of Lokpal Bill were presented in Parliament eight times in last 42 years. Even these weak versions were not passed by Parliament. This means, left to themselves, the politicians and bureaucrats will never pass any law which subjects them to any kind of objective scrutiny. At a time, when the country has witnessed scams of unprecedented scale, the impatience of the entire country is justified. And we call upon you, not to look for precedents, but show courage to take unprecedented steps.

3. It is being said that I have shown impatience when the government has "initiated" the process. I would urge you to tell me - exactly what processes are underway?

a. You say that your Group of Ministers are drafting the anti‐corruption law. Many of the members of this Group of Ministers have such a shady past that if effective anticorruption systems had been in place, some of them would have been behind bars. Do you want us to have faith in a process in which some of the most corrupt people of this country should draft the anti‐corruption law?

b. NAC sub‐committee has discussed Jan Lokpal Bill. But what does that actually mean? Will the government accept the recommendations of NAC sub‐committee? So far, UPA II has shown complete contempt for even the most innocuous issues raised by NAC.

c. I and many other friends from India Against Corruption movement wrote several letters to you after 1st December. I also sent you a copy of Jan Lokpal Bill on 1st December. We did not get any response. It is only when I wrote to you that I will sit on an indefinite fast, we were promptly invited for discussions on 7th March. I wonder whether the government responds only to threats of indefinite fast. Before that, representatives of India Against Corruption had been meeting various Ministers seeking their support for the Jan Lokpal Bill. They met Mr Moily also and personally handed over copy of Jan Lokpal to him. A few hours before our meeting with you, we received a phone call from Mr Moily's office that the copy of Jan Lokpal Bill had been misplaced by his office and they wanted another copy. This is the seriousness with which the government has dealt with Jan Lokpal Bill.

d. Dear Dr Manmohan Singh ji, if you were in my place, would you have any faith in the aforesaid processes? Kindly let me know if there are any other processes underway. If you still feel that I am impatient, I am happy that I am because the whole nation is feeling impatient at the lack of credible efforts from your government against corruption.

4. What are we asking for? We are not saying that you should accept the Bill drafted by us. But kindly create a credible platform for discussions - a joint committee with at least half members from civil society suggested by us. Your spokespersons are misleading the nation when they say that there is no precedent for setting up a joint committee. At least seven laws in Maharashtra were drafted by similar joint committees and presented in Maharashtra Assembly. Maharashtra RTI Act, one of the best laws of those times, was drafted by a joint committee. Even at the centre, when 25,000 tribals came to Delhi two years ago, your government set up a joint committee on land issues within 48 hours. You yourself are the Chairperson of that committee.

This means that the government is willing to set up joint committees on all other issues, but not on corruption. Why?

5. It is being said that the government wants to talk to us and we are not talking to them. This is utterly false. Tell me a single meeting when you called us and we did not come. We strongly believe in dialogue and engagement. Kindly do not mislead the country by saying that we are shunning dialogue.

We request you to take some credible steps at stemming corruption. Kindly stop finding faults and suspecting conspiracies in our movement. There are none. Even if there were, it does not absolve you of your responsibilities to stop corruption.

With warm regards,
K B Hazare

தொடர்ந்து இட்லிவடையில் அண்ணா ஹஸாரே பற்றி செய்திகள் வரும். இவர் நமக்காக செய்கிறார் நிச்சயம் ஆதரவு கொடுக்க வேண்டும்.

Wednesday, April 6, 2011


வடிவேலு, விஜயகாந்தை தண்ணி வண்டி என்று விமர்சிப்பது இருக்கட்டும். விஜயகாந்த் தான்போகும் பிரச்சார கூட்டங்களில் எல்லாம், டாக்டர் ராமதாசையும்,பாமகவையும் "அதிமுகவின் வடிவேலு" ரேஞ்சுக்கு விமர்சித்து வருகிறார்.

" சமூக நீதி காத்த போராளி (ராமதாஸ்) என்கிறார்களே, அவர் அப்படி எந்த சமூகத்தைக் காத்தார்?. எந்த சமூகத்தை அவர் காத்தார் என்பதை அறிய நான் விரும்புகிறேன்.

நீங்கள் காத்த சமுதாயம் எது என்பது மக்களுக்குத் தெரியாதா?. அவரது கூட்டணித் தலைவர் கருணாநிதி பாணியில் சொல்வதானால், இரு ஆடுகளை முட்ட விட்டு அதில் ரத்தம் குடிக்கும் ஓநாய் போன்றவர்தான் இவர்.

இரு ஜாதிகளை மோத விட்டு, அதில் ரத்தம் குடித்தவர்தான் இவர். இவர் என்னைப் பார்த்து சிறைக்குப் போனாயா என்கிறார். நீங்கள் எதற்காக சிறைக்குப் போனீர்கள். நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்க சிறைக்குப் போனீர்களா?. பஸ்களை எரித்து சிறைக்குப் போனீர்கள். சமூகத்தை மோத விட்டு சிறைக்குப் போனீர்கள். இது பெருமையா?."

என்று விமர்சித்து இருக்கிறார்.

"பாமகவினர் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி நாசமாக்கிவிட்டனர். இப்போது பசுமை தாயகம் என்ற பெயரில் அமைப்பு தொடங்கி மரம் நடச் சொல்கின்றனர்.இதேபோன்று மதுவை ஒழிப்போம், டாஸ்மாக் கடைகளை விரட்டுவோம் என அன்று வீராப்புடன் முழங்கியவர்கள் இன்று டாஸ்மாக் கடைகளை நடத்தும் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளனர்.

குரங்கு மரம் விட்டு மரம் தாவுவது போல ஒவ்வொரு தேர்தலிலும் பாமக கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கிறது."

இவ்வாறு ராமதாசை ஓநாய், குரங்கு என்கிற பாணியில் விமர்சித்து வருகிறார் விஜயகாந்த்.

முன்பு, தனியாக நின்றபோது ஜெயலலிதா,கருணாநிதி என்று இருவரையும் பாரபட்சமின்றி விமர்சித்தார் விஜயகாந்த். தற்சமயம், அதிமுக கூட்டணியில் இருப்பதால், டாக்டரையும், கருணாநிதியையும் பிடித்து கொண்டு இருக்கிறார்.

இன்று தேர்தல் பிரச்சாரம் செய்பவர்கள் யாரிடமும் நல்ல செயல்திட்டங்களோ, அறிவிப்புகளோ இல்லை. அந்த அந்த ஊருக்கு தக்கவாறு வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்கள். தேர்தலுக்கு பின் இதையெல்லாம் யார் நினைவில் வைத்து இருக்க போகிறார்கள் என்ற கணக்கில், ஊருக்கு ஒரு வாக்குறுதிகளை வீசி வருகிறார்கள் திமுக மற்றும் அதிமுக தலைவர்களும்.

வைகோ போன்று நன்றாக பிரச்சாரம் செய்பவர்கள் இன்று இரண்டு கூட்டணியிலும் இல்லை. இன்றைய அரசியல் டிரண்ட் படி, அரசியல் கட்சி பேச்சாளர்களுக்கு இரண்டே தகுதிகள்தான். ஒன்று, தனிப்பட்டமுறையில் எதிராளியை தாக்கி பேசவேண்டும். இரண்டு, ஆபாசமாக இரட்டை அரத்ததோடு கண்டிப்பாக பேச தெரிந்து இருக்க வேண்டும்.விந்தியா,குஷ்பூ போன்ற கவர்ச்சி நடிகைகளையும், வடிவேலு போன்ற நடிகர்களையும் நம்பியே பிரச்சாரத்தில் இருக்கின்றன இன்றைய கட்சிகள்.

ஆனால், விஜயகாந்த் மட்டும் வாய் ஓயாது குறை சொல்லிவருகிறார். முறையான செயல்திட்டங்களோ ஏன் சினிமாவில் அவர் பேசும் புள்ளிவிவரங்கள் கூட அவர் பிரச்சாரத்தில் இல்லை.வடிவேலு சொல்வது ஒரு விதத்தில் உண்மையே. விஜயகாந்துக்கு எப்படி பேசவேண்டும், பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற அரசியல் அடிப்படைகள் கூட தெரியவில்லையே.

"தருமபுரியில் நான் வேட்பாளரை அடித்ததாக சில தொலைக்காட்சிகளில் செய்தி வெளியிட்டுள்ளனர். அது தவறானது. ஒருவேளை அப்படியே நான் அடித்திருந்தாலும், என்னுடைய கட்சி ஆளைத்தானே அடித்தேன். என்னைப் பற்றி என் கட்சிக்காரர்களுக்கு தெரியும். என் கையில் அடி வாங்குகிறவன் நாளை மகாராஜா ஆவான்' என்றார்.
முன்பு ஒரு முறை,திருச்சியில் ஒரு படபிடிப்புக்காக சென்றபோது, தனது கார் டிரைவரை பொதுமக்கள் முன்பாக கன்னத்தில் அறைந்தார் விஜயகாந்த்.

தர்மபுரியில் நடந்த ஒரு பிரச்சார கூட்டத்தில், தனது வேட்பாளர் பெயரே தெரியாமல் தவறான பெயரை சொல்லி பிரச்சாரம் செய்ய, அதை சுட்டிகாட்டிய வேட்பாளரை 'பப்ளிக்காக' குனியவைத்து, முதுகில் சாத்தி இருக்கிறார் விஜயகாந்த். எந்த அளவுக்கு அவர் பக்குவமோ அறிவோ இல்லாமல் இருக்கிறார் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.

இது குறித்து தர்மபுரி தொகுதி தேமுதிக வேட்பாளர் பாஸ்கர் கூறியதாவது, "தர்மபுரியில் விஜயகாந்த் பிரசாரம் செய்தபோது அவர் வைத்திருந்த மைக்கின் பேட்டரி கழன்று கீழே விழுந்தது. அதை எடுத்துக் கொடுக்குமாறு தனது உதவியாளரை கேட்டார். அவரும் எடுத்துக் கொடுத்தார். பின்னர் மீண்டும் கீழே விழுந்தபோதும் எடுத்துக் கொடுத்தார்.

பேட்டரியை தான் அவர் கையால் 2, 3, முறை தட்டினார். ஆனால் என்னை அடித்துவிட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது நானும், பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகனும் பிரசார வேனுக்குள் தான் அமர்ந்திருந்தோம்.

விஜயகாந்த் தாக்கியது போல் காட்டப்பட்டது சித்தரிக்கப்பட்ட காட்சி. நான் வெற்றி பெறக் கூடாது என்று இது போன்ற பொய்யான பிரசாரம் செய்கின்றனர்" என்றார்.

அதிமுக - தேமுதிக கூட்டணிக்கு முதல் காரணமான 'துக்ளக்' ஆசிரியர் சோ அவர்கள்,

"எனக்கென்னமோ இது ஒரு பெரிய விஷயமாவே படல. வேட்பாளரை அடிப்பதையெல்லாம் சீரியஸா எடுத்துக்க முடியுமா... அவரு ஏதோ வேகத்துல அடிச்சிருப்பார். அவங்க கட்சி ஆள்தானே... இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. ஜனங்க இதை சீரியஸாகவும் எடுத்துக்க மாட்டாங்க" - என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.

"நீ அடிச்சா மகாராஜா ஆகிடுவாங்கன்னு சொல்றியே, பேசாம உன்னோட கல்யாண மண்டபத்து உன் கட்சிக்காரங்கள வரிசையில நிக்க வச்சு ஆளுக்கு நாலு குத்து நங்கு நங்குன்னு குத்தி, எல்லோரையும் மகாராஜா ஆக்க வேண்டியதுதானே. அதுக்கு எதுக்குடா எலக்ஷன். பொது இடத்துல வச்சு நாலு பேரு பாக்கற மாதிரி நங்கு நங்குன்னு குத்துறான். இதை இந்த தேர்தல் அதிகாரிங்க பார்த்துக்கிட்டு என்ன செய்றாங்க. அந்தாளை கைது செய்ய வேண்டாமா."

என்று வழக்கமாக தாக்கி இருக்கிறார் திமுகவின் "பிரச்சார பீரங்கி" வடிவேலு.

விஜயகாந்தின் நடவடிக்கைகளை பார்த்தால், வடிவேலு சொல்வது ஓரளவுக்கு நியாயமாகவே படுகிறது.

பக்குவமோ பொறுப்போ கொஞ்சம் கூட இல்லாத விஜயகாந்தின் சினிமா கவர்ச்சிக்கு வரும் கூட்டத்தை நம்பி ஏமாந்துவிட்டார் ஜெயலலிதா என்று தோன்றுகிறது.

(நன்றி, இனி, அடுத்த வாரம்)

-இன்பா

தேர்தல் 2011 - யாருக்கு வாய்ப்பு ?


பலகாலமாக நகர்ப்புறத்தில் படித்த ஆண்கள் திமுகவிற்கும், கிராமப்புற தலித் பெண்மணிகள் பெரும்பாலும் அதிமுகவிற்குமாக வாக்களித்து வந்தனர். ஆனால் இனி நிலைமை அப்படி இருக்காது என்று சொல்லுகிறார்க்ள். திமுகவும் இம்முறை தனது பாரம்பரிய நகர்ப்புற ஓட்டுவங்கியை விட்டு அவசர அவசரமாக வெளியேற முடிவு செய்திருக்கிறது. காரணம் நகர்ப்புற படித்த வர்க்கத்தினரிடையே 2G ஊழல் தொடர்பாக ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சி தொடர்பான கவலைதான். இந்த முறை கர்ண பரம்பரை போல் நகரிலுள்ள 16 தொகுதிகளில் 5 தொகுதிகளை மிகவும் எளிதாக கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு தாரை வார்த்து விட்டது. இவ்வாறு நகர்ப்புற தொகுதிகளை விட்டு ஓட்டம் பிடித்ததில் முன்னோடியாக திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதியே அங்கம் வகிக்கிறார். 1967 லிருந்து, நகர்ப்புறத்தை விட்டு வெளியே செல்வது கருணாநிதிக்கு இதுவே முதன்முறை.இதற்கு அதிகாரப்பூர்வமாக சொல்லப்படும் காரணம், கருணாநிதி தனது சொந்த ஊர் தொகுதியிலிருந்து போட்டியிட விரும்புகிறார் என்பது, இந்த வாதத்தை திமுக தொண்டனே ஏற்றுக்கொள்ள மாட்டான். 2G ஊழல் தொடர்பான விழிப்புணர்ச்சி சென்னை நகர மக்களிடையே அதிகமாக இருப்பதால், திமுகவின் முன்னணித் தலைவர்கள் எவரும் அங்கு போட்டியிடத் துணியவில்லை என்பது தான் நிஜம். காங்கிரஸ் கட்சியானது, திருவிக நகர், ராயபுரம், மைலாப்பூர், தி.நகர் மற்றும் அண்ணா நகர் தொகுதிகளில் தனது வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது. திமுக தலைவரின் மகனும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலினும் தனது விருப்பத் தொகுதியும், தொடர்ந்து மும்முறை வெற்றி பெற்ற ஆயிரம் விளக்கு தொகுதியை விட்டு, சென்னையின் எல்லைப்புறத் தொகுதியான கொளத்தூருக்கு இடம் பெயர்ந்துள்ளார். 2006 தேர்தல்களில் நேரெதிரிடையாக திமுக 14 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட்டது. சென்ற தேர்தலிலேயே நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் அதிமுகவிற்கு செல்வாக்கு கிட்டியது வெளிப்படையாகத் தெரிந்ததே இம்மாற்றத்திற்குக் காரணம் என்கிறார் ஸ்டாலினின் முந்தைய ஆயிரம் விளக்கு தொகுதியில் 2001 தேர்தலில் 70 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 2006 தேர்தலில் அவர் பெற்ற வாக்கு சதவிகிதம் 46 ஆகக் குறைந்தது. மற்றொரு உதாரணம் துறைமுகம் தொகுதி. இதை திமுக தலைமைக்கு மிகவும் நெருக்கமான அன்பழகன் தனக்கு சொந்தமாகவே மாற்றியிருந்தார். 1996 இல் 70 சதவிகித வாக்குகளுடன் வெற்றி பெற்ற இவர், 2006 இல் பெற்ற வாக்கு சதவிகிதம் 44. திமுகவின் மற்றொரு கோட்டையான திருவல்லிக்கேணியில் 2006 தேர்தலில் அதிமுகவின் ஃபதர் சயீத், திமுகவின் நாகநாதனை அதிர்ச்சித் தோல்விக்குள்ளாக்கினார். இவர் திமுகவின் அன்றைய தேர்தல் அறிக்கையின் சிற்பி என்று அறியப்பட்டவர். சான்ஸ் கொடுத்தால் திமுக தலைவர்கள் ஆந்திரா, கர்நாடகா எல்லையில் கூட நிற்பார்கள்.

இந்த முறை கருத்து கணிப்பு என்ன சொல்லுகிறது என்று பார்க்கலாம்.


லயோலா கல்லூரி கருத்து கணிப்பு இவ்வாறு சொல்லுகிறது "5 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்துடன் அ.தி.மு.க. அணிக்கு சாதகமாக 105 தொகுதிகள் வரை உள்ளன. தி.முக. அணிக்கு சாதகமாக 70 தொகுதிகள் வரையும், மீதமுள்ள 59 தொகுதிகளில் கடுமையான போட்டியும் நிலவுகிறது"

மீண்டும் மீண்டும் வா! வேண்டும் வேண்டும் தா !


க்ருஷ்ண பாகவதர் இந்த பேரை அவ்வளவு சீக்கிரமாக யாரும் மறக்க முடியாது. அவருடைய லேட்டஸ்ட் சரக்கு .. 


இந்த தேர்தல் மிக வித்யாசமானது. கருணாநிதியையும் திமுகவையும் வடநாட்டு பத்திரிக்கைகளும், சில தமிழ் பத்திரிக்கைகளும், இ.வ போன்ற ப்ளாக்குகளும் 2G ஊழலை மையமாக வைத்து சாட்டையை சுழற்றிக்கொண்டிருக்கின்றன. நமது emotionகளை சற்று தள்ளி வைத்து ப்ராக்டிகலாக சிந்திக்கும் முயற்சியே இக்கட்டுரை.
மனிதன் எப்போது தோன்றினானோ அப்போதிலிருந்தே காமம், க்ரோதம், லோபம், மோஹம், ஊழல், exploitation எல்லாமே ஆரம்பித்து விட்டது. 



மகாபாரதக் காலத்திலிருந்தே மனித குலத்தில் இவை இருந்ததற்க்கான சான்றுகள் பல உள்ளன. ஒரு வடமொழி பாட்டின் படி
‘யஸ்யாஸ்தி வித்தம்
ஸ் நர: குலீன:
ஆ ஏவ வக்தா ஸ ச தர்சனீயா’
யாரிடம் பணம் இருக்கிறதோ அவன்தான் மனிதன். அவனே நல்ல குலத்தில் பிறந்தவன். அவனே படித்தவன், பண்பாளன், சிறந்த பேச்சாளன், எல்லோரும் பார்த்து வணங்கக் கூடியவன். எனவே அந்த செல்வத்தை எந்த வழியிலும் அடைய மனிதன் முயற்சி செய்வான். அதில் அரசியல்வாதிகள் முன்னணியில் எப்போதுமே நிற்கின்றனர்.
இந்த களைகளை எடுக்க எடுக்க மீண்டும் மீண்டும் அவை முளைத்துக் கொண்டே இருக்கும். முடிவே கிடையாது. இந்த தேர்தலில் நாம் களையெடுக்க முயற்சித்தால் தரிசு நிலம்தான் மிஞ்சும். ஏனென்றால் இப்போது எல்லா கட்சிகளும் அரசியல்வாதிகளும் களைதான். எதை பிடுங்குவது? எதை நீர் விட்டு வளர்ப்பது. இந்த நிலையில் எந்த களை நமக்கு உபயோகமாகமானது என்றுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு வியாதியை தீர்க்க நாம் குடிக்கும் மருந்து இன்னொரு மாபெரும் வியாதியை தோற்றுவிக்கலாம். 



என்னமோ திமுக மட்டும்தான் ஊழல் செய்வது போலவும், ஜெ வந்தால் நாட்டில் தேனும் பாலும் பெருகும் என்பது போலவும் பல படித்தவர்களால் பேசப்படுகிறது. நாம் முன்பு பார்க்காத ஜெவின் ஆட்சியா? அவர் தலைகனத்துடன் ஆட்டமாக ஆடியதும் மன்னார்குடி மாஃபியா கும்பலுடன் ஊழலின் உச்சக்கட்டத்தை அடைந்ததும் மக்கள் மறந்து விட்டார்களா என்ன? The remedy for removing the current scandalous government may result in a much worst catastrophe.

பல வருடங்கள் தென்னாட்டு, மற்றும் வடநாட்டு கார்ப்பரேஷன்களில் உயர் அதிகாரியாய் பணி புரிந்ததில் நான் கண்ட உண்மைகளை எடுத்து சொல்ல விரும்புகிறேன். கருணாநிதி குடும்பத்தினர், டிவி, சினிமா மற்றும் பல தொழில்களை வளைத்துப் போட்டு விட்டதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர். இவர்கள் வலிமை அடைவதற்க்கு முன் 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் தொழில்கள் இருந்த நிலமை என்ன? மத்திய அரசாங்கத்தையும், ஊழல் காங்கிரஸ்காரர்களை கையில் போட்டுக் கொண்டும் வடநாட்டு தொழிலதிபர்கள் தமிழ்நாட்டை சுரண்டி வந்தனர். High Quality Productகளை நேர்மையோடும், நாணயத்தோடும் உற்பத்தி செய்து வந்த TVS, Ashok Leyland, மற்றும் திரு.சிவசைலத்தின் தொழில்களை வளரவிடாமல் செய்ததோடு அவற்றை நசுக்கியும் வந்தனர். Standard Motors மூடப்பட யார் காரணம்? TVS Suzuki நாட்டிலேயே உயர் நிலையை எட்டிக்கொண்டிருந்தபோது அதை அழிக்க அவர்கள் செய்த சூழ்ச்சி எத்தனை? ஸ்ட்ரைக்கை தூண்டுதல், supply chainஐ துண்டாடுதல், மத்திய அரசாங்கத்தின் மூலம் பல நெருக்கடிகள் என்று எத்தனை முயற்சிகள் செய்தார்கள்?
தமிழ்நாட்டில் Leyland அரசாங்க பேருந்துகளையே பார்த்திருந்த எனது கண்களுக்கு முதன் முறையாக பல வடநாடுகளுக்கு அலுவலில் 80களில் பயணிக்கும்போது எங்கு நோக்கினும் Tata Benzதான். KSRTC அலுவலர் ஒருவரிடம் ’ஏன் லேலண்ட் பஸ்ஸே இங்கு ஓடமாட்டெங்குது’ என்று கேட்டபோது ’அது ரொம்ப நல்ல வண்டிதான். ஆனா அரசாங்கத்துல TATA வண்டிகளை வாங்கச் சொல்லி உத்தரவு போடறாங்க. என்ன செய்யறது” என்றபோது TATA எப்படி எல்லா மாநிலங்களிலும் அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கியிருக்கிறது என்பது தெரிய வந்தது. சரி உள்ளூர் மார்க்கெட் கிடைக்கலேன்னா பரவாயில்லை என்று ஐரோப்பாவில் பெரும் ஆர்டர் பெற்று கண்ணியமாக பிழைப்பு நடத்தி வந்த லேலண்டை சும்மா விட்டர்களா வடநாட்டார்? Imports Exports policyகளை தவறாக உபயோகப்படுத்தி Production & Delivery களை நிறுத்துவது அல்லது தாமதப்படுத்துவது, யூனியனை தவறாக தூண்டி விடுவது என்று எத்தனை தில்லு முல்லுகள் செய்தார்கள். தரமான TVS கம்பெனி High end of Value Chain ஐ அடைந்தால் நாம் அதோகதிதான் என்று அஞ்சி ‘ ஏதோ ப்ரேக்கோ, ரேடியேட்டர் மூடியோ செஞ்சு பொழச்சுக்கோ! பெரிய லெவலுக்கு ஆசைப்படாதே!!’ என்று தமிழ்நாட்டு தொழில்களை முடக்கி போட்டது யார்? திமுகவா? இல்லை காங்கிரஸ்காரகளை கையில் வைத்துகொண்டு ஆட்டம் போட்ட வடநாட்டவர்களா?
TVS உலகதரம் வாய்ந்த Whirlpool உடன் கூட்டு சேர்ந்து பாண்டிச்சேரியில் தயாரித்த washing Machines கபகபவென விற்பனையில் முன்னேறுவது கண்டு துடித்துப் போய் Videocon போன்ற வடநாட்டு கம்பெனிகள் செய்த மோசடித்தனங்கள் கொஞ்சமா நஞ்சமா? ஒரு லாரி லோடுக்கு மட்டும் invoice செய்துவிட்டு அதே invoice வைத்து பத்து லாரி வாஷிங் மெஷின்களை excise ஓ மற்ற வரிகளோ செலுத்தாமல் அரசாங்கத்தை ஏமாற்றி பல வருடங்கள் கோடிக்கணக்கில் அல்லவா வரி ஏய்ப்பு செய்தார்கள். நல்ல வேளை மக்கள் தரமான மெஷின் என்று whirlpoolக்கு ஆதரவு அளித்ததால் அந்த கம்பெனி மூழ்காமல் தப்பித்தது. இதெல்லாம் Tip of the Icebergதான். தொழில் துறையில் இருப்பவர்களை கேட்டால் கதை கதையாக இன்னும் பல கம்பெனிகள் பற்றி சொல்வார்கள்.
’நீ என்னாடா டாடாவா பிர்லாவா?’ என்று மக்கள் மத்தியில் அவர்களை விட்டால் பெரிய பணக்காரர்களோ தொழிலதிபர்களோ இந்தியாவில் இப்பொதும் எப்போதும் கிடையாது என்று மக்களுடைய sub conscience ல் பதிந்துபோய் வடநாட்டு புகழ்பாடியாகவே பல decades இருந்தோர்களே தவிர நம்மவர்கள் இந்திய அளவில் வெற்றியடைய முடியாமல் தடுப்பது என்னது என்று யோசித்ததே இல்லை. அடுத்து வந்தார் அம்பானி!. அவர் செய்த தில்லு முல்லுக்களும், சட்ட மீறல்களும், வரி ஏய்ப்புகளும் ஏராளம்! ஏராளம்! இப்போதும் அம்பானி போல் உண்டா என்றுதான் தமிழர் புகழ்கிறார்களேயொழிய இவர் அயோக்கியர், அழுகுணி, தில்லுமுல்லு கேஸ் என்று யாராவது தென்னிந்தியர் அவரை வசை பாடினார்களா. திரூபாயின் புகழ்பாடி , அவர் தவறுகளை நியாயப்படுத்தி நம் தென்னிந்திய இயக்குனர் மணிரத்தினம் திரைப்படம் வேறு எடுத்தார்.
காங்கிரஸ் பெருச்சாளிகள் பலர் கோடிக்கணக்கில் ஊழல் செய்து, கையும் களவுமாக மூட்டை மூட்டையாக பணம் பிடி பட்டபோதும், அட இது இந்தியச் சொத்துடா என்று கவலைப்படாமல் ‘அட அவன் எங்கியோ டெல்லியில கொள்ளையடிச்சான், பீகாரிலே கொள்ளையடிச்சான்’ என்று அவனை ஹீரோ ரேஞ்சுக்கு பார்த்தனரே தவிர, நம் பத்திரிக்கைகள் அதைக் கண்டுகொண்டதா! இல்லை நம் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தை நிறுத்திக் காட்டினரா!. என்னமோ இந்த ஊழல் recordஐ அவர் வீழ்த்தினார், இவர் வீழ்த்தினார் என்று தனது statistics மேதாவித்தனத்தை காட்டிக் கொண்டனரே தவிர உருப்படியாக என்ன செய்தார்கள். அந்த பெருச்சாளிகள் இன்றும் சகல மரியாதைகளுடன், க்ஷேமமாய், இன்றும் கவர்மெண்ட் பாதுகாப்புடன் சொகுசு காரில் உலா வருகிறார்கள். ஆனால் இன்று என்ன நடக்கிறது? ஒரு தமிழன், ஒரு தமிழ் கட்சி ஊழல் செய்ததென்றால் பாராளுமன்றமே ஸ்தம்பிக்கிறது, பத்திரிக்கைகளும், மற்ற ஊடகங்களும் சாடித் தள்ளுகின்றன. இது வடநாட்டு ஏகாதிபத்தியம் இல்லாமல் வேறென்ன?



திமுகவினர் அயோக்கியர்கள், ஊழல் பெருச்சாளிகள், தில்லு முல்லு செய்து சாட்டிலைட், டிவி, கேபிள், சினிமா இவைகளை கைப்பற்றி விட்டனர் என்று சொல்பவர்கள், டாடா, பிர்லா, அம்பானி வளர்ந்த கதையை மறந்ததேனோ! முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும், அயோக்கியர்களை வெல்ல இன்னொரு அயோக்கியனால்தான் முடியும், ஒரு ரொளடியை மிஞ்ச இன்னொரு ரொளடிதான் தேவை. இவர்கள் இப்படி செய்யவில்லையென்றால் இன்று இந்த துறைகள் zee TV, Start Tv போன்ற வடநாட்டு கம்பெனிகளால் monopolyயாக்கப்பட்டு, தமிழ்நாட்டிலிருந்து மொத்த வருமானமும் வடநாட்டிற்க்கு முன்பு போலவே மூட்டை கட்டப்பட்டிருக்கும். வடநாட்டான் ஊழல் செய்தால் எங்கோ நடக்கிறது நமக்கென்ன என்றிருப்பவர் ஒரு தமிழ் கட்சி செய்தால் சீறுவது ஏன்? தமிழ்நாட்டிலிருந்தா அந்த பணம் சுரண்டப்பட்டது? மத்திய அரசாங்கத்திடம் இருந்துதானே! We should be happy somebody is getting us our due share that was taken from us for decades. தமிழ்நாட்டு மக்களின் பாக்கெட்டிலேயெ கைவிட்டு நம்மையே சுரண்டி வந்த ஜெ கட்சிக்கு இது எவ்வளவோ மேல்தான். "கங்கை கொண்டான்", "கடாரம் வென்றான்", "இமயத்தில் கொடி நாட்டினான்", "கனக விசயரைக் கல் சுமக்க வைத்தான்" என்று சோழமன்னன் பற்றி இலக்கியம் பாடும் தமிழர் அதே சோழ மண்ணைச்சேர்ந்தவரின் கட்சி அதே conquering ஐ repeat செய்யும்போது இகழ்வது ஏனோ?



ஊழல் ஊழல் ! நமக்கு பெருமை தேடித் தரும் யோக்கியமான தலைவர் தமிழகத்தில் இல்லையா? என்பவர்களுக்கு என் பதில் இதுதான். ’ஊழல் என்பது உலக அரசியலில் கலந்துவிட்ட இணைபிரியாத ஒன்று. அமெரிக்காவில் கூட பெரிய புஷ், சின்ன புஷ் இருவருமே சவுதி ஆயில் கம்பனிகளில் சம்பந்தப்பட்டிருந்ததும், துணை ஜனாதிபதி டிக் சேனியின் ஹாலிபர்ட்டன் ஊழலும் அனைவரும் அறிந்ததே. இந்தியாவை பொருத்தவரை காங்கிரஸ் ஊழலில் பழம் தின்று கொட்டை போட்ட கட்சி. தமிழ்நாட்டை தவிர எல்லா மாநிலங்களிலும் அவர்கள் பல வருடங்கள் அடித்த கொள்ளை பல லட்சம் கோடிகளைத் தாண்டும். ’ஐயோ! ஊழலைக் கொண்டாடுறானே இவன், அபிஷ்டு! காமராஜர் மாதிரி ஊழலில்லாத தலைவரல்லவா தமிழ்நாட்டுக்கு தேவை. ஊழலை நியாயப்படுத்தும் பாகவதர் ஒழிக! என்று பின்னூட்டமிடப் போறவங்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் “ இப்போது உள்ள நிலையில் காமராஜை போன்ற ஊழலற்ற தலைவர் தமிழ் நாட்டை ஆண்டால் நாம் தலையில் துண்டு போட்டுக்கொண்டு கோயிலில் போய் உண்டைக்கட்டி வாங்கி தின்ன வேண்டியதுதான். எனவே தமிழ்நாட்டை காப்பாற்ற தலை சிறந்த ஊழலரசர் ஒருவரால்தான் முடியும்.” ‘ஏன் அங்க ஜெ வால் அது முடியாதா! அவங்க முன்னாடியே prove பண்ணவங்கதானே? என்று அவருக்கு ஓட்டு போடப் போகிறவர்கள் ஒன்றை நினைவு கொள்ளவேண்டும். எந்த தொழிலாக இருந்தாலும் emotional trip ல் செல்லாமல் கருமமே கண்ணாக இருப்பவர்தான் நமக்குத் தேவை. மாஃபியா கும்பலால் டைரக்ட் செய்யப்பட்டு அடிக்கடி உச்சாணிக் கொம்பில் ஏறிக்கொண்டு, மத்திய அரசையும் பகைத்துக் கொண்டு கிணற்றுத் தவளையாக உள்ளூரிலேயே ஆட்டயப் போடுவர்களால் தமிழருக்கு நன்மையில்லை. ஆடி கறக்கிற மாட்டை ஆடியும், பாடிக் கறக்கற மாட்டை பாடியும் கறக்கத் தெரிந்த ஊழல் விஞ்ஞானிகளால்தான் தமிழ்நாடு செழிப்படையும். சண்டை போடுறா மாதிரி போட்டு, வேண்டும்போது ப்ரஷர் குடுத்து, பங்கு போட்டுக் கொள்ள வேண்டிய இடத்தில் அவர்களுடன் ’கை’ கோர்த்து பங்கு போட்டுக் கொண்டு தமிழகத்திற்கு மேலும் செழிப்பை கொண்டு வருபவர் அல்லவா நவீன கால கங்கை கொண்டான்! அவர் மீண்டும் வருவது அல்லவா தமிழரும் தமிழ் தொழில்களும் உயர வழி!
இங்கிருந்து central poolல் சேர்ந்த பணத்தை தனக்காகவும், தன் stateற்காகவும் கோடி கோடியாக காங்கிரஸ் மற்றும் பல வடநாட்டு கட்சிகள் கொள்ளையடித்து வந்த நிலை மாறி, புயலோ, வெள்ளமோ தமிழ்நாட்டிற்கு உரிய நியாயமாக வந்து சேர வேண்டிய நிவாரணத்தொகை முழுமையாக கொடுக்கப்பட்டதில்லை என்கிற நிலை மாறி ‘உன் அடிமடியிலேயே வைக்கிறேண்டா கை’ என்று சூளுரைத்து செய்து காட்டும் செயல் வீரரல்லவா தமிழருக்கு வேண்டும்!. தமிழகத்தை இன்று முக்கிய IT மையமாகவும், வடநாட்டார் வேலை தேடி இங்கு கையேந்தி வரவும், இந்தியாவின் detriot ஆகவும் மாற்றிக் காட்டியது கொள்ளையர் என்றாலும் அது ஓ.கே!. வெள்ளைக்கார கொள்ளையரை ஏற்றுக் கொண்டு அடிமையாக இருந்த நமக்கு உள்ளூர்காரன் அதையே செய்தால் என்ன வேகுது! பல வளங்களை நமக்கு கொண்டு வந்து சேர்ப்பவர் சூழ்ச்சிக்காரரோ, ஊழல் பேரரசரோ, தில்லு முல்லு விஞ்ஞானியோ எனக்கு அக்கறையில்லை. என் வீட்டிலேயே கை வைத்தாரா என்று மட்டுமே பார்ப்பேன். பகவத்கீதையில் சொல்லியிருக்கிற படி Survival of the fittest என்கிற game விளையாடப்படும்போது நாம் மட்டும் பலமில்லாமல் சோனியாக இருக்க முடியுமா? அந்த பலத்தை பெற வேண்டுமானால் நாம் ஊழலில் சிறக்கவேண்டும்! இல்லையென்றால் நம் representatives ஆவது ஊழலில் வடநாட்டானை மிஞ்சி, முடிந்தவரை நம் பங்கை மத்திய அரசிடமிருந்து பெறவேண்டும். நாம் நெடுநாளாய் வடதிசை நோக்கி கையேந்தி இருந்த நிலமை மாறி, மிரட்டல், தாஜா, partnership என்கிற பல உத்திகளை உபயோகித்து தானும், தன் குடும்பமும் பயனடைந்து, வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் பொசியுமாம் என்பதாய் இவ்வளமை எல்லா தமிழ் மக்களையும் அடையவேண்டும். இந்த வேலையை கருணாநிதி & கம்பனி திறம்படவே செய்து வருகிறது. அவர்களின் இந்தப் பணி இச்சமயத்தில் தேவையானதுதான். ஆகவே
தமிழர் தலைவா! மீண்டும் மீண்டும் வா! எமக்கு வேண்டும் வேண்டும் தா!

Saturday, February 5, 2011

ராஜா கைது - கதை, வசனம், இயக்கம் - அன்னை சோனியா மொய்னோ - விஸ்வாமித்ரா

ராஜா கைது - ஸ்பெக்ட்ரம் தொடர் நாடகத்தின் ஒரு காட்சி - கதை, வசனம், இயக்கம் - அன்னை சோனியா மொய்னோ - விஸ்வாமித்ரா

நம் மக்கள் டி வி சீரியல்களில் தினம் தினம் மூழ்கி முத்துக் குளிப்பவர்கள். ஆனால் அதே சீரியலில் முந்தா நாள் என்ன நடந்தது என்று கேட்டால் யாருக்குமே தெரியாது. மறந்து விடுவார்கள். ஆழ்ந்து கவனிக்கும் டி வி சீரியலிலேயே முந்தா நாள் நடந்த காட்சி நினைவுக்கு வராத பொழுது ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று அலட்சியமாக இருக்கும், குவாட்டர் பாட்டிலுக்கும் பிரியாணி பொட்டலத்திற்கும் இலவச டி வி க்கும் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் ஜனநாயகச் சோரம் போகும் ஓட்டைக் காசுக்கு விற்கும் நம் மக்களுக்கா இந்த ஸ்பெக்ட்ரம் சீரியலில் வரும் ஒரு சின்ன எபிசோடான ராஜா கைது நாடகம் நினைவில் நிற்கப் போகிறது?

இன்று இந்த கைது காட்சி. அனைவரும் விசிலடித்து கைத் தட்டி விட்டு மறந்து விடப் போகிறார்கள்.


சரவண பவனில் கால் கடுக்க க்யூவில் நின்று சாப்பிடும் நம் மக்களுக்கு ராஜகோபால் அண்ணாச்சி செய்தது என்ன அவரது இன்றைய இருப்பு என்ன என்பது தெரியுமா? 2001ல் ஒரு பெண்ணை அபகரிக்க அவளது கணவனை ஆள் வைத்துக் கொள்கிறார். அதற்காக விரைவுக் கோர்ட்டில் நான்கு வருடம் கழித்து (விரைவுக் கோர்ட்டிலேயே நான்கு வருடம்) அவருக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை அளிக்கிறார்கள். அதில் இருந்து ஜாமீனில் வருகிறார். வியாபாரம் செழிக்கிறது. செல்வம் கொழிக்கிறது. அனைவரும் அவர் கொலையாளி என்பதையே மறந்து போன வேளையில் எங்கேயோ அவர் பெட்டி பெட்டியாகக் கொட்டிக் கொடுத்த பணம் விலை போகாத நிலையில் மீண்டும் சென்னை உயர்நீதி மன்றம் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் கொலை நடந்து 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் பத்தாண்டு தண்டனையை உறுதி செய்கிறது. அண்ணாச்சி சீரியலில் அதுவும் ஒரு காட்சி. அந்த சீரியல் இன்னும் முடிந்து விடவில்லை. உச்ச நீதி மன்றத்தில் 2009ம் ஆண்டில் இருந்து இன்று வரை அவரது கேஸ் இன்னும் உறங்குகிறது. கொலையாளி என்று ஹைக்கோர்ட்டால் தீர்ப்பளிக்கப் பட்டவர் எத்தனை வருடங்கள் ஜாமீனிலேயே கழிக்க முடியும்? அவர் வாழ் நாள் வரை என்பது இந்தியாவில் சாத்தியம். அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் என்று எடுப்பார்கள் என்று விசாரிப்பார்கள் என்பது ராஜகோபால் அனுதினமும் வணங்கும் அவரது அப்பன் முருகனுக்குக் கூடத் தெரியாது. முருகனின் வேல் பாயாத இடங்களிலும் சாம்பார் காசு பாயும். இந்தியாவில் நீதியை விலைக்கும் வாங்கலாம் ஒத்தியும் போடலாம்.

ஆனால் நீதியைத் தள்ளிப் போடுவதில் இந்தியாவின் நீதி மன்றங்களும் அரசாங்கமும் மதப் பாகுபாடு எல்லாம் பார்ப்பதில்லை. ஒரு கொலை செய்த ராஜகோபாலுக்கும் தண்டனை கிடையாது நூறு பேர்களைக் கொன்ற பயங்கரவாதிகளுக்கும் தண்டனை கிடையாது. ஒரே வித்தியாசம் ராஜகோபால் தன் மாளிகையில் சொந்தச் செலவில் மசாஜ் செய்து கொள்வார். அப்சல் குருவுக்கும், மதானிகளுக்கும் அரசாங்கம் தன் செலவில் மசாஜ் செய்து விடுகிறது. ஒரு கொலை செய்தால் வீட்டில் தங்கலாம் நூறு கொலை செய்தால் அரசாங்கத்தின் ராஜ உபச்சாரம் கிடைக்கும். ராஜகோபாலுக்கும் அப்சல் குருவுக்கும் கசாப்புக்கும் இந்தியாவின் நீதி மன்றங்களில் தண்டனை அளிக்கும் பொழுது அவர்கள் காலம் முடிந்து அவர்களின் பேரப் பிள்ளைகளின் காலங்களும் முடிந்திருக்கும்.

ராஜகோபால் போன்ற முதலாளிகள் அப்சல் குரு போன்ற பயங்கரவாதிகளுக்கே இவ்வளவு சலுகை என்றால் சகல வல்லமை படைத்த அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு சலுகை அளிக்கப் பட வேண்டும்? இன்று ஸ்பெக்ட்ரம் ஊழல் ஓரளவுக்கு நம்மில் ஒரு சிலருக்கு நினைவில் இருக்கலாம் ஆனால் நரசிம்மராவ் அமைச்சரவையில் இதே தொலைத் தொடர்பு மந்திரியாக இருந்த சுக்ராமை எவருக்கும் நினைவில் இருக்கப் போவதில்லை. அது நாம் அனைவரும் மறந்து விட்ட காங்கிரஸ்காரர்களின் மற்றொரு மெகா சீரியல் சுக்ராமின் மெகா ஊழல். சுக்ராமின் சப்தர்ஜங் என்க்ளேவ் பங்களாவின் பாத்ரூம்களில் கட்டுக் கட்டாக குவித்து வைக்கப் பட்டிருந்த லஞ்சப் பணத்தை அள்ளிச் சென்றார்கள். டி விக்களில் காட்டினார்கள். அவருக்கும் ஒரு கீழ் நீதி மன்றத்தில் 1996ம் ஆண்டில் 13 ஆண்டுகள் தண்டனை வழங்கினார்கள். வழக்கு மேல் கோர்ட்டுக்குப் போனது. அங்கேயே நிரந்தரமாகத் தேங்கி நின்றது. அதன் பின் அந்தக் வழக்கு ஒரு இஞ்சு கூட முன்னேறவில்லை. சுக்ராமும் நிரந்த ஜாமீனில் கொள்ளையடித்தக் கோடிக்கணக்கான பணத்தில் சொகுசாக ஓய்வு எடுக்கிறார். அவருக்கும் வாழ்நாள் ஜாமீன் அளித்திருக்கிறார்கள். அவர் சாகும் வரை அந்தக் கேஸ் விசாரிக்கப் படப் போவதேயில்லை. சுக்ராம் இன்று இமாச்சலப் பிரதேசத்தில் மண்டி நகரில் தன் மாளிகையில் தான் கொள்ளையடித்த கோடிக்கணக்கான சொத்துக்களுடன் சொகுசாக வாழ்ந்து வருகிறார். அவரது பையன் அரசியலில் மற்றொரு சுக்ராமாக வளர்ந்து வருகிறான். பி ஜே பி கூட வெட்க்கம் மானம் ரோசம் எல்லாவற்றையும் எடியூரப்பாவிடம் விற்பதற்கு முன்பாகவே சுக்ராமிடம் அடகு வைத்து அவரது கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டது. சுக்ராமுக்கு யார் தண்டனை தரப் போகிறார்கள். அவரது வழக்கு இன்னும் ஹைக் கோர்ட்டுக்கே செல்லவில்லை. இப்பொழுது அவருக்கு வயது 80க்கும் மேல். இன்னும் செஷன்ஸ் கோர்ட், ஹைக்கோர்ட், ஹைக்கோர்ட் பெஞ்ச், சுப்ரீம் கோர்ட், சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் என்று இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் விசாரிக்கப் படப் போவதோ தண்டனை கிட்டப் போவதோ கிடையாது.

இந்தியாவில் அரசியல்வாதிகள் அதிலும் காங்கிரஸ் தி மு க போன்ற கட்சியின் அரசியல்வாதிகள் உறுதியாக எந்தக் காலத்திலும் தண்டிக்கப் படப் போவதே கிடையாது. அது உறுதியாகத் தெரிந்து வைத்திருப்பதினால்தான் நகர்வாலா, குவோ எண்ணெய் ஊழல் போன்றவற்றில் துவங்கி போஃபோர்ஸ், காமன் வெல்த் கேம்ஸ், ஆதர்ஷ், ஸ்பெக்ட்ரம் வரை அலுக்காமல் சலிக்காமல் எந்த வித பயமும் இல்லாமல் தொடர்ந்து இந்தியாவை நேருவின் வாரிசுகள் கொள்ளையடித்து வருகிறார்கள். இந்தியர்களுக்கு அடிமையாக இருப்பதில் ஒரு தனியாத போதை, சுகம் உள்ளது. முகலாயர்கள், பிரிட்டிஷ்காரர்கள், ஃபிரெஞ்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள் எல்லாம் ஆண்டு விட்டார்கள். இந்த இத்தாலிக்காரர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் அவர்களுக்கும் ஒரு பெரிய வாய்ப்பைக் கொடுப்போமே என்று தாராளமாக கொள்ளையடிக்க வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள். இத்தாலியர்கள் ஈவு இரக்கமற்ற கொள்ளை கொலைகளுக்குப் பேர் போனவர்கள். உலகத்தின் முக்கியமான நகரங்களில் அவர்களது மாஃபியா ராஜ்யங்கள் இன்றும் கொடி கட்டிப் பறக்கின்றன. இத்தாலியப் பிரதமர் தன் வீட்டையே ஒரு மாபெரும் ரெட் லைட் ஏரியாவாக நடத்தி வருபவன். அப்பேர்ப்பட்ட ஒரு குலப் பெருமையை நம் பாரதத்தின் அன்னை சோனியா மாதா மட்டும் விட்டுக் கொடுத்து விடுவாரா என்ன? போஃபோர்ஸில் ஆரம்பித்த இத்தாலியக் கொள்ளை இன்று வரை ஓயவில்லை. இந்தியாவின் கடைசி கல் மண் தூசியைக் கொள்ளையடிக்கும் வரை சோனியாவின் கொள்ளைக் கூட்டம் ஓயப் போவதில்லை. நாமும் அதற்கான ஆதரவதைத் தொடர்ந்து அளிப்பதை நிறுத்தப் போவதும் இல்லை.

இந்த ஸ்பெக்ட்ரம் நாடகத்தின் முழு சூத்திரதாரி சோனியா மொய்னோ. ஜூனியர் விகடன் போன்ற மஞ்சள் பத்திரிகைகள் ஏதோ கருணாநிதியும், சோனியாவும், மன்மோகனும் உத்தம புத்திரர்கள் போலவும் அவர்களுக்கு ராடியா என்றால் யார் என்று தெரியாதது போலவும் கதை விடுகின்றன. கருணாநிதியின் நா தழு தழுத்தது, குரல் கர கரத்தது, மன்மோகன் வாளை எடுத்துச் சுழற்ற ஆரம்ப்பித்து விட்டார், சோனியா ஊழலை எதிர்த்துப் புயலெனக் கிளம்பி விட்டார் என்றெல்லாம் வாரா வாரம் இவர்களுக்கு சோப்புப் போட்டு தூய்மைப் படுத்தும் வேலையில் கிழக்கின் பத்ரியை மிஞ்சி விடுகிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் மட்டும் அல்ல போஃபோர்ஸ் துவங்கி ஆதர்ஷ் வரை அனைத்து ஊழல்களுமே மிகக் கச்சிதமாகத் திட்டமிட்டு நடத்தப் படும் ஒரு மாபெரும் மாஃபியாக் கொள்ளை. அதன் முழு ஸ்கிரிப்டுமே சோனியாவிடம் மட்டுமே உள்ளது. கருணாநிதியும், மன்மோகனும், ராஜாவும், கபில் சிபலும், சிதம்பரமும் அவர்களுக்கு அளிக்கப் படும் வேடங்களை கொடுக்கப் பட்ட வசனங்களைப் பேசி நடித்து விட்டுப் போகிறார்கள். இதில் அனைவருமே கச்சிதமான பாத்திரங்கள். ராஜாவை என்று கைது செய்ய வேண்டும் எப்படி அது நடக்க வேண்டும் என்பது வரை கருணாநிதிக்கும் தெரிந்தே நடத்தப் படும் ஒரு சீரியலின் காட்சிகள் மட்டுமே. சற்று பின்னே போய் போஃபோர்ஸ் ஊழலைப் பார்க்கலாம்
போபோர்ஸ் ஊழல் காங்கிரஸ் தலைமையில் அமைக்கப் பட்ட ஜே பி சி குழுவினால் நீர்த்துப் போகச் செய்யப் படுகிறது. ராஜீவின் ஊழல் மறைக்கப் பட்டு மீண்டும் அவர் பிரதமராகியிருந்திருக்க வேண்டியது. அடுத்து வந்த வாஜ்பாய் அரசினால் குவட்ரோச்சியின் பணத்தை முடக்க மட்டுமே முடிந்தது. மீண்டும் மன்மோகன் அரசு வந்தவுடன் முதலில் செய்த வேளை இன்றைய கர்நாடாக கவர்னராக இருந்து கொண்டு ஊழல் பற்றி வாய் கிழியப் பேசும் பரத்வாஜ் என்ற குள்ளநரி குவட்ரோச்சின் லண்டன் வங்கிக் கணக்கை மீண்டும் திறந்து விடச் சொல்லி குவட்ரோச்சி தன் வங்கிப் பணத்தை எடுத்துக் கொண்டு போக அனுமதிக்கப் பட்டதே. கொடுக்கப் பட்ட பாத்திரங்களை கச்சிதமாக பரத்வாஜும், மன்மோகனும் நடத்தி முடிக்கிறார்கள். குவட்ரோச்சியை அநாவசியமாக நாம் துன்புறுத்தி விட்டோம் என்று அறிக்கை விடுகிறார் மன்மோகன். மீனவர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட தகவலே தெரியாது என்று சொல்லும் மன்மோகன் குவட்ரோச்சியை அநாவசியமாக சங்கடப் படுத்தி விட்டோம் என்று சொல்லி மன்னிப்புக் கேட்க்கத் தெரிகிறது.

என்னதான் இத்தாலிய சோனியா திறமையாக கதை வசனம் எழுதினாலும் கூட அவரது திரைக்கதையில் இல்லாத பாத்திரங்களும் சம்பவங்களும் நாடகத்தில் அடிக்கடி நுழைந்து விடுகிறார்கள். இருந்தாலும் அவர்களையெல்லாம் திறமையாகச் சமாளித்து மீண்டும் சீரியலை சரியான பாதையில் கொண்டு வருவதில் தான் அவரது பரம்பரை மாஃபியா திறமை அனைத்தும் வெளியில் வருகிறது. அப்படி போஃபோர்ஸ் விஷயத்தில் எதிர் பாராமல் வந்த புதிய திருப்பம் தான் சமீபத்திய ட்ரிப்யூனல் ஒன்று வழங்கிய தீர்ப்பு. போஃபோர்ஸில் ஊழலே நடக்கவில்லை கமிஷனே கொடுக்கவில்லை குவட்ரோச்சி அப்பாவி என்று குவட்ரோச்சிக்காக கண்ணீர் விட்ட மன்மோகன் சிங்கும், குவட்ரோச்சியின் பணத்தை அக்கிரமாக இந்தியா முடக்கி வைத்தது தவறு என்று சொல்லி சி பி ஐ ஐ விட்டு லண்டன் வங்கியில் இருந்த பணத்தை குவட்ரோச்சிக்குத் திருப்பிக் கொடுக்க வைத்த கயவன் பரத்வாஜும் இவர்களை இயக்கிய சோனியாவும் எல்லாமே சுபம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட வேளையில் இப்பொழுது மீண்டும் எங்கிருந்தோ வந்த ஒரு ட்ரிப்யூனல் கொடுத்த கமிஷனுக்கு வருமான வரி கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. இப்பொழுது இந்தப் பூதத்தை அமுக்க மீண்டும் சோனியா ஒரு ஸ்கிரிப்ட் ரெடி செய்ய வேண்டும். மாஃபியாக்கள் போல இந்த எதிர்பாராமல் வரும் பாத்திரங்களின் கதைகளை அவ்வப் பொழுது கணக்குத் தீர்த்து விட்டால் எவ்வளவு வசதியாக இருக்கும் என்று அவர் நினைக்கலாம். ஏற்கனவே சஞ்சய் காந்தி முதல் ராஜசேகர ரெட்டி வரை தீர்க்கப் பட்ட பல கணக்குகளையும் நாம் இவர்கள் இயக்கிய சீரியலில் பார்த்துத்தான் வருகிறோம்.

ஒரு ஊழலை ஊத்தி மூடுவதற்கு முன்பாகவே அடுத்த பூதம் கிளம்பி விடுகிறது. ரஷ்யாவின் கே ஜி பி சோனியாவுக்கும் ராஜீவுக்கும் கொடுத்த்ட பத்து மில்லியன் டாலர்களை ஸ்விஸ் வங்கியில் வைத்திருக்கும் விபரம் இப்பொழுது மீண்டும் எழுகிறது. ஜெர்மன் அரசிடம் வேண்டுமென்றே திட்டமிட்டே ஒரு சிக்கலான விதிமுறையின் கீழே கள்ளப் பணம் வைத்திருப்பவர்களின் விபரங்களை மன்மோகன் அரசு பெற்று அதைக் காரணம் காட்டியே அதை வெளியிட முடியாது என்று பிடிவாதமாக மறுத்து வருகிறது. உண்மை என்னவென்றால் அந்த விதிமுறையின் கீழ் இல்லாமலேயே சாதாரணமாகவே அந்தப் பட்டியலை அரசாங்கம் பெற்றிருக்க முடியும். இந்திய அரசியல்வாதிகளின் பெயர்கள் வெளியில் வந்தால் ஜெர்மனிக்கு என்ன பிரச்சினை? சுப்ரீம் கோர்ட் மீண்டும் மீண்டும் கேட்டும் வெளிநாட்டு வங்கிகளில் கள்ளப் பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை அரசு தெரிவிக்கவே தெரிவிக்காது என்று பிடிவாதமாக மன்மோகனும், பிரணாப்பும் மறுத்து வருகிறார்கள். யாரைப் பாதுகாக்க இந்த விதிமுறை நாடகம்? இது சீரியலின் மற்றொரு சீரியசான காட்சி இந்தக் காட்சியையும் மிக எளிதாக இத்தாலிய அன்னையின் வசனங்கள் கடந்து செல்லும், நாம் அந்தக் காட்சியையும் காணத்தான் போகிறோம். மாஃபியா பள்ளிக் கூடத்தில் படித்த திறமையான கதாசிரியர் சோனியாவின் ஒரே எரிச்சல் சுப்ரமணியன் சுவாமிகளும், கோபிக் கிருஷ்ணன்களும் மட்டுமே. கே ஜி பாலகிருஷ்ணன்களும், தாமஸ்களும், கபில் சிபல்களும் இருக்கும் வரை சுப்ரமணியன் சுவாமிகளும் கோபி கிருஷ்ணன்களும் பெரிய பொருட்டல்ல என்று சோனியா தீர்மானத்திற்கு வந்ததினாலேயே சஞ்சய்காந்திகளுக்கும், மாதவ்ராவ் சிந்தியாக்களுக்கும், ராஜசேகர ரெட்டிகளுக்கும் ஏற்பட்ட நிலை இவர்களுக்கு ஏற்படாமல் இது வரை பிழைத்திருக்கிறார்கள்.


காமன் வெல்த் ஊழலில் சுரேஷ் கல்மாடி ஒரு பலியாடு பாத்திரம் உண்மையான பயனாளிகளுக்காக அவருக்கு உரிய பங்கைக் கொடுத்து விட்டு பலியாடாக நடிக்கச் சொல்லுகிறார்கள் அவரும் திறமையாக நடிக்கிறார். காமன்வெல்த் என்றால் பொதுச் சொத்துத்தானே? அதனால் அது நாட்டின் முதல் குடும்பத்தின் பொதுச் சொத்தாகி விட்டிருக்கிறது. சுரேஷ் கல்மாடி ஒரு சின்ன அடியாள் மட்டுமே பணப் பரிவர்த்தனை முழுவதுமே மன்மோகனின் முழுக் கட்டுப்பாட்டிலேயே விநியோகம் செய்யப் பட்டிருக்கிறது. ராகுல் வின்சியின் அரசியல் ஆலோசகர் மூலமாகக் கடத்தப் பட்டிருக்கிறது என்று சுப்ரமணிய சுவாமி இதை பகிரங்கமாக அறிவித்த பின்னரும் கூட அவர் மீது அன்னை சோனியா இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வினோதமானது. ஸ்பெக்ட்ரத்துக்கு ஒரு ராஜா போலவே காமன் வெல்த்துக்கு ஒரு கல்மாடி, ஆதர்ஷுக்கு ஒரு சவான். பெரிய பெரிய ஜமீந்தார்களுக்கு எல்லாம் விசுவாசமான ஊழியர்கள் இருப்பார்கள். ஜமீந்தார் எவ்வளவு பெரிய கொலையைச் செய்தாலும் கூட இந்த ஊழியர்கள் ஆஜராகி நாங்கள் தான் அந்தக் கொலையைச் செய்தோம் என்று பொறுப்பேற்றுக் கொள்வார்கள். குறைந்த பட்ச தண்டனையையும் ஜமீன்ந்தார் விசுவாசத்திற்கு அளிக்கும் பணத்தையும் பெற்றுக் கொள்வார்கள். அவர்களைப் போன்ற விசுவாசமான கூலிகள் இந்த ராஜாக்களும், கல்மாடிக்களும், மன்மோகன்களும்.

இப்பொழுது மீண்டும் ஸ்பெக்ட்ரம் நாடகத்தின் லேட்டஸ்ட் எபிசோடான ராஜா கைது விவகாரத்துக்கு வருவோம். தி மு க வில் ராஜாக்கள் கைதாவது சில மாதங்களிலேயே மக்கள் மறந்த பின்னர் அவர்களுக்கு மீண்டும் பதவிக்கள் அளிக்கப் படுவதும் புதிது அல்ல. ஏற்கனவே கொடூரமான சித்ரவதை வழக்கில் கைதான இன்னொரு ராஜாவுக்கு இப்பொழுது மீண்டும் பதவி வழங்கப் படுகிறது. போலீஸ் அதிகாரியின் குடும்பத்தையே பூண்டோடு கொன்ற மந்திரியின் உறவினரை மந்திரி அரசாங்கக் காரில் போய் சிறையில் விசாரிக்கிறார். தினகரன் பத்திரிகையில் கொளுத்தப் பட்டவர்கள் அனைவருமே தங்களுக்குத் தாங்களே தீ வைத்துக் கொண்டபடியால், தா கிருஷ்ணன் தன்னைத் தானே குத்திக் கொண்டு செத்த படியாலும் அஞ்சா நெஞ்சர்கள் மத்திய மந்திரியாகிறார்கள். அண்ணா நகர் ரமேஷ் குடும்பத்துடன் தங்களைத் தாங்களே கொன்று கொண்டபடியால் நாளைக்கு யாரேனும் முதல்வராகவும் கூடும். ஆக இந்த ஸ்பெக்ட்ரம் சீரியலில், இந்தத் தருணத்தில் ராஜா கைது என்ற பெயரில் அரசாங்கச் செலவில் ராஜ உபச்சாரம் அனுபவிக்க வேண்டும் என்பது அன்னையின் வசனம். அந்தக் காட்சி இப்பொழுது அரங்கேறுகிறது. ஆக ராஜா கைதைக் கண்டு இந்தியாவில் நீதி பிழைத்து விட்டது. அன்னை ஊழல்களை அழிக்கக் கிளம்பி விட்டார். கருணாநிதி ஊழல் சூரனை சம்காரம் பண்ணப் போகிறார் என்று யாரும் ஜூ வி போன்ற அபத்தச் செய்திகளைப் படித்து விட்டுக் கனவு காண வேண்டாம். எதுவும் நடக்கப் போவதில்லை. இந்தியாவில் எப்பொழுதுமே அதர்மம் மட்டுமே வெல்லும். அதர்ம்மம் மீண்டும் மீண்டும் வெல்லும் கவலையே வேண்டாம்.

பார்த்தாயா ஊழலைக் கண்டு எங்கள் அன்னை பொறுக்க மாட்டார் ராஜாவைக் கைது செய்து விட்டார் என்று பிரச்சாரம் செய்யலாம். தி மு க வும் ராஜாவின் ஒன்றையணாப் பதவியில் இருந்து விலக்கி வைத்து விட்டு ஆறு மாதம் கழித்து மந்திரி பதவி கொடுப்பார்கள். ஆனால் தேர்தலின் பொழுது ஊழல் செய்வது யாராக இருந்தாலும் தலைவர் பொசுக்கி விடுவார் பொசுக்கி என்று பிரச்சாரம் செய்யலாம். ராஜாவையே கைது செய்து விட்டார்கள் இனி ஜே பி சி யாவது கோ பி சியாவது போய் எல்லோரும் பட்ஜெட்டுக்கு ஆதரவு கொடுங்கப்பா என்று உதிரி எதிர்க் கட்சிகள் மீண்டும் காங்கிரஸ் ஆதரவுக்குப் போய் விடும். பிப்ரவரி 5 சுப்ரமணிய சுவாமியின் கேஸ் விசாரணைக்கு வரும் பொழுது அதுதான் அரெஸ்ட் செஞ்சாச்சே அப்புறம் என்னப்பா என்று கோர்ட்டில் கேசை ரத்து செய்து விடுவார்கள். ராஜாவுக்கு நெஞ்சு வலி [ edited] வலி எல்லாம் எடுத்து உடனே டெல்லியின் ஐந்து நட்சத்திர மருத்துவமனையில் ஜாமீன் கிடைக்கும் வரை கைது காலத்தை அனுபவிப்பார் அதற்கும் அரசு செலவு செய்யும். பிரிவினைவாதம் பேசியவர்கள் அமெரிக்காவில் செத்தால் கூட அரசு செலவில் விமானம் வைத்து அழைத்து வரும் அரசு அல்லவா நம் அரசு? ராஜாவை கைது செய்ததுடன் எல்லாமே முடிந்து விட்டது நீதி கிடைத்து விட்டது என்றொரு பிம்பம் எண்ணம் மக்கள் மனதில் உருவாகும். ராஜாவுக்கு ஜாமீன் கொடுக்கப் பட்ட பின்னால் அனைத்துமே மெதுவான ஒரு கதிக்குச் சென்று விடும். மக்கள் மனதில் இருந்து ஒரு சுக்ராம் போல, ஒரு ராஜகோபால் அண்ணாச்சீ போல இந்த ராஜாவும் ஸ்பெக்ட்ரமும் மறைந்து போவார்கள். மீண்டும் ஒரு சரியான தருணத்தில் அன்னை சோனியாவின் கதை வசனம் எழுதிய காட்சியின் படி ஸ்பெக்ட்ரம் என்ற ஊழலே நடக்கவில்லை என்ற தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டே வழங்கும்.

பிப்ரவரி 5 சுவாமியின் வழக்கு விசாரணைக்கு ஒரு நாள் முன்பாக கைது படலத்தைக் காட்சியை வைத்துக் கொண்டால் போதுமானது என்று அன்னை முடிவு செய்ய காட்சி அரங்கேறுகிறது. இது வரவிருக்கும் தமிழ் நாட்டுத் தேர்தலிலும் காங்கிரசையும் தி மு காவையும் ஊழலைச் சகித்துக் கொள்ளாத தூய்மையான கட்சிகளாக காண்பிக்க உதவும். இதில் நம் ஜீ வி மாதிரியான ராம் ராம் ((சொன்னா ராம் செய்தா ராம்) பத்திரிகைகள் எழுதுவது போல கருணாநிதிக்கு எந்த வித அதிர்ச்சியும் இருக்கப் போவதில்லை. இதில் முக்கியமான பங்குதாரர்களான கருணாநிதி, மன்மோகன், ராஜா, சிதம்பரம் அனைவரும் பேசி வைத்தே இந்த கைது நாடகத்தை அன்னையின் ஆணைப் படி அரங்கேற்றுகிறார்கள்.

கைது என்றவுடன் ராஜாவை உடனே திஹார் ஜெயில் அரை டிரவுசர் போட்டு கையில் அலுமியப் பாத்திரமும் தலையில் குல்லாவும் போட்டு மோசமான கைதிகளின் வன்புணர்வுக்கு விட்டு விடுவார்கள் என்று யாரும் கனவிலும் எண்ணி விட வேண்டாம். ராஜாவுக்கு ஜாமீன் கொடுக்கப் படும் வரை உயர்தர உபச்சாரம் உறுதி செய்யப் படும். ஜாமீனுக்குப் பிறகு சில மாதங்கள் அவரது சொகுசு பங்களாக்களில் ஒன்றில் உல்லாசமாக ஓய்வு எடுப்பார். ராஜாவையே கைது செய்து விட்டோம் நாங்கள் தூய்மையானவர்கள் கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்கள் என்று சோனியாவும், மன்மோகனும், பிரணாப்பும், சிதம்பரமும் உத்தமபுத்திரர்களாக நாடெங்கும் பிரச்சாரம் செய்வார்கள். தமிழகத் தேர்தலில் தி மு கவும் காங்கிரசும் ஊழலை சகித்துக் கொள்ளாத கட்சிகள் என்று பிரச்சாரம் செய்யப் படும். பத்திரிகைகளும், டி விக்களும், புதிதாக புத்தகப் பதிப்பாளர்களும் கறைபடியாத தி மு க வுக்காக பிரச்சாரம் செய்து தி மு க , காங்கிரஸ் கூட்டுக் களவாணிகளை மீண்டும் ஜெயிக்க வைப்ப்பார்கள். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து இந்தியாவில் இது வரை கொள்ளையடிக்கப் படமால் இருக்கும் சொத்துக்களைக் கொள்ளையடிப்பார்கள். சீரியலின் காட்சிகள் தடையின்றி ஓடும். ஸ்பெக்ட்ரமில் அடிக்கப் பட்ட ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கான பணம் அனைவராலும் மெதுவாக மறக்கப் படும். ஸ்பெக்ட்ரம் மற்றொரு போஃபோர்சாக மாறும். ஆனால் பிச்சைக்காசாக வீட்டு மனையை உறவினருக்கு அளித்த எடியூரப்பா போன்றவர்கள் ஊழல்களுக்காக கழுவேற்றப் படுவார்கள். ராஜாவை கைது செய்த பின்னாலும் கூட மக்கள் நலனில் அக்கறையில்லாத மக்கள் விரோத பி ஜே பி பாராளுமன்றத்தை நடக்க விடாமல் தடுக்கிறது என்ற பிரச்சாரத்திற்கும் ராஜா கைது உதவும்.


ராஜாவை அழகிரியும், ஸ்டாலினும் எதிர்க்கிறார்கள் என்றும் ராஜாவை சஸ்பெண்ட் செய்யா விட்டால் தான் மந்திரிப் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று அழகிரி மிரட்டினார் என்று ஒரு புருடாவை, ஒரு தமாசை அடிக்கடி நமது ராம் ராம் பத்திரிகைகள் அவிழ்த்து விடுவதை நம் மக்கள் ஸ்பெக்ட்ரம் சீரியலின் ஒரு எபிசோடாக அடிக்கடி கண்டு விசிலடித்து மகிழ்ந்திருப்பார்கள். அதுவும் சீரியலில் ஒரு காட்சி மட்டுமே. ஆனால் அந்தப் பகுதிக்கு கதை வசனத்தை மட்டும் இளைஞன் படத்தின் வசனகர்த்தாவே எழுதிக் கொள்ளும் படி நாடகத்தின் இத்தாலிய இயக்குனர் சுதந்திரம் கொடுத்து விடுவார். அழகிரிக்கு மீது தினகரன் பத்திரிகையில் மூன்று அப்பாவிகளின் சாவுக்குக் காரணமானவர் என்ற எண்ணமும், வேறு விதமான இமேஜும் மக்கள் மனதில் உள்ளது. அதை மறைப்பதற்கும் சீரியலின் ஹீரோ ராஜாவே உதவுகிறார். ராஜா தான் எத்தனை நல்லவர். ஒரு பக்கம் சோனியாவுக்கும், மன்மோகனுக்கும், ராடியாவுக்கும், கனிமொழிக்கும், தயாளுவுக்கும் உதவுகிறார் என்றால் மறுபக்கம் அண்ணன் அழகிரியின் இமேஜை வளர்க்கவும் அதே ராஜாவே உதவுகிறார். அண்ணே நீங்க என்னை அடிப்பது போல அடிங்க. நானோ கெட்டவனாகிப் போனேன். 1.76 லட்சம் கோடி கொள்ளைக்காரனாகிப் போனேன் என்னை இந்த சமயத்தில் திட்டினால் உங்களுக்கு இருக்கும் கெட்ட பிம்பம் எல்லாம் மறைந்து தூயவர், லஞ்ச ஊழலை எதிர்ப்பவர், தந்தையையே தட்டிக் கேட்ப்பவர், ஊழலுக்காக பதவியையே துறந்து விடுவேன் என்று சொல்லிக் கொண்டேயிருக்கும் தியாகி என்ற பெயர் கிடைக்கும் சான்சை விடாதீர்ங்க என்றிருப்பார் போலும். ஸ்டாலினும் வந்த வாய்ப்பை விடாமல் ஊழலை எதிர்த்த உத்தமர் பெயரை ராஜாவைக் கண்டிப்பதாக பத்திரிகைகளில் வதந்தியைக் கிளப்பி விட்டு தட்டிக் கொண்டு போகிறார். இன்று நடைபெற இருக்கும் பொதுக் குழுவிலும் ஊழலை சகிக்க மாட்டோம் என்று ஊழலில் சர்க்காரியாப் பட்டம் வாங்கிய தமிழ் தாத்தா சூளுரைத்து கோர்ட் தீர்ப்பு வரும் வரை ராஜாவை கொ ப சே (அது என்ன கண்றாவிப் பதவியோ) பதவியில் இருந்து நீக்கி வைக்க தீர்மானம் போட்டு ஊழல் எதிர்ப்பில் சீரோ டாலரென்ஸ் உள்ள கட்சி தி மு க ஒன்றே என்பதை நிரூபிப்பார்கள்.
[ தற்போதைய செய்தி: ஒருவர் கைது செய்யப்பட்டுவிட்ட காரணத்தினாலேயே அவர் குற்றவாளியாகிவிடமாட்டார் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆ.ராசா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இந்த பிரச்சனையை பொறுத்தவரை திமுக ஒரு திறந்த புத்தகம். ]

ஆக ஒரே ஒரு ராஜாவை வைத்து சோனியா, கனிமொழி, ராஜாத்தி, அம்பானி, டாட்டா, ராடியா அனைவரும் பில்லியனர்களாகிறார்கள். அழகிரி , ஸ்டாலின் போன்றோர் உத்தமபுத்திரர்களாகிறார்கள். ராஜா ஒரு வாரமோ ரெண்டு வாரமோ அரசாங்க செலவில் மசாஜ் செய்து விட்டு புத்துணர்ச்சியுடன் ஆறு மாதம் கழித்து மந்திரியாகி விடுவார். ராஜாவின் ஜாதிக்காரர் கே ஜி பாலகிருஷ்ணனை போல இன்னுமொரு அமர்த்தப் பட்ட நீதிபதி உரிய பதவிக்கு வரும் பொழுது சுவாமிகள் போட்ட வழக்குகள் எல்லாம் தள்ளுபடி செய்யப் படும். நான் அப்போதே சொன்னேனே கேட்டீர்களா என்று கிழக்கு பத்ரி பதிவு எழுதுவர். ”ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல” என்றும் ஊருக்கு உழைத்த உத்தமர் ராஜா என்றும் புத்தகம் போடுவார். மக்கள் டாஸ்மாக் குவார்ட்டரை உள்ளே தள்ளி விட்டு இலவச டி வி யில் இளைஞன் பார்த்து விசிலடித்துக் கொண்டிருப்பார்கள். அனைத்தும் சுபமே. மங்களம். நியூயார்க்கிலும், சிக்காகோவிலும், இத்தாலியிலும் கஷ்டப் பட்டு துப்பாகி சுட்டு, உயிர்களை இழந்து சில மில்லியன்கள் கூட சம்பாதிக்க பல்வேறு பிறவி மாஃபியாக்கள் நாய் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, நோகாமல் நொடியாமல் அடிமைகளின் உழைப்பில், எந்தக் கஷ்டமும் படாமல் இந்திய மக்களின் முட்டாள்த்தனத்தினால் மட்டுமே பல டிரில்லியன் டாலர்களை எளிதாகச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் ஊழல்களின் சூத்திரதாரி சோனியா.

சோனியா இயக்கும் நாடகங்கள் அனைத்திலும் தெளிவாக அவரது தனித்துவமான முத்திரையை பளிச் என்று காணலாம். அது போஃபோர்ஸ் ஊழல் நாடகமாக இருந்தாலும் சரி, ஸ்பெக்ட்ரம் ஊழலாக இருந்தாலும் சரி அவருக்கு என்று ஒரு பாணி உள்ளது. அந்த ஐந்து கட்டளைகள் படி எந்த விதமான ஊழலாக இருந்தாலும் மக்களை மறக்க அடித்து விடலாம் மீண்டும் அதை விடப் பெரிய ஊழல்களை நடத்தலாம்.

1. முதலில் ஊழலை செய்து முடித்து விடுவது. யாருக்க்கும் தெரியாமல் அமுங்கி விடும் என்று நம்புவது 2. வெளியில் தெரிய வந்தால் ஊழலே நடக்கவில்லை என்று சாதிப்பது. கட்சியின் படித்த பெரிய அறிவாளிகளயும் பிரச்சாரகர்த்தர்களையும் கொண்டு ஆளுக்கு ஒரு விதத்தில் பேசி மக்களைக் குழுப்புவது 3. அதையும் மீறி போய் விட்டால் ஒரு கமிட்டி அல்லது குழு அமைத்து விசாரணைச் செய்ய வைத்து ஊழலே நடக்கவில்லை என்று அறிக்கை விடுவது 4. மெதுவாக ஊழல்களைக் கையாளப் போகும் அதிகாரிகள் நீதிபதிகள் பதவியில் தன் அடியாட்களை அமர்த்துவது 5. அவர்களிடம் விசாரணை வரும் வரையில் காலம் தாழ்த்துவது. உரிய தருணத்தில் தன் அடியாட்கள் விசாரணையை நடத்துமாறு செய்து விஷயத்தை நிரந்தரமாக இழுத்து மூடுவது.


இந்தியாவில் படித்தவர்கள் மீது மரியாதையும், அபிமானமும் நம்பிக்கையையும் மக்கள் வைக்கின்றார்கள். இதைச் சரியாகப் புரிந்து கொண்ட சூத்திரதாரி சோனியா முதலில் தான் ஆக்ஸ்ஃபோர்டில் பட்டம் பெற்றதாகப் பொய் சொல்லி தேர்தலில் போட்டியிடுகிறார். அது ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை அல்ல வெறும் டுயுட்ட்டோரியல் காலேஜ் என்று தெரிய வந்த பொழுதும் பொய் சொன்னதற்காக அவரை யாரும் கைது செய்யவில்லை மாறாக தியாகத் திருவுரு என்று போற்றி வணங்குகிறார்கள். தனக்கு பிரதமர் வாய்ப்பு சட்ட ரீதியாக கிட்டாது என்று தெரிந்தவுடன் நல்ல படித்த அடிமையாகத் தேர்ந்தெடுக்கிறார். இந்தியாவிலேயே உலகத்திலேயே மிகச் சிறப்பான கல்வித் தகுதிகளைக் கொண்ட ஒருவரை வைத்து தன் ஊழல்கள் அனைத்தையும் கச்சிதமாக நடத்துகிறார். அதில் மன்மோகனுக்கு பங்கு இல்லாமல் இருக்காது. இல்லாவிட்டால் இவ்வளவு படித்த ஒரு மேதை வெறும் பதவிக்காக மட்டுமே இத்தனை ஊழல்களையும் தானே பொறுப்பேற்று நடத்துவாரா? படித்தவன் சூது செய்ய மாட்டான் என்ற நம்பிக்கையில் ஏமாந்து போய் மக்கள் மீண்டும் மீண்டும் இந்த அயோக்கியனை நம்பி வாக்களித்தார்கள். தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் சோனியாவிடமும் மன்மோகனிடமும் கற்றுக் கொண்ட அதே பாடத்தை கையாண்டார்கள் ஸ்பெக்ட்ரம் விஷயத்தில். அப்பாவி மக்களிடம் மட்டும் அல்லாமல் இணையத்தில் படிக்கும் எழுதும் படித்த மக்களிடமும் கூட அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்றால், ஐ ஐ டி யில் படித்திருந்தால் அவர் ஒரு நல்ல அறிவாளியாக இருப்பார் அவர் சொல்வதில் நியாயமும் உண்மையும் விஷயமும் இருக்கும் என்று நம்பினார்கள். மக்களின் நம்பிக்கையைப் பயன் படுத்தி ஊழல்களைத் திறம் பட நடத்தி வரும் மன்மோகன் போலவே அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரு அறிவாளியின் மீதான நம்பிக்கையைப் பயன் படுத்தி அவரை விட்டு இந்த ஊழல் பெரிதாக வெடிக்கும் முன்பாக இருந்தே பிரச்சாரம் செய்ய வைக்கப் பட்டது. ஸ்பெக்ட்ரம் என்ற பெயர் வருவதற்கு முன்பாகவே அப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக ராஜா இதைச் செய்திருக்கவே முடியாது என்ற பிரச்சாரத்தை முதலில் மெதுவாக ஆரம்பித்து பின்னால் வலிமையாகச் செய்ய ஆரம்பித்தார். உச்ச கட்டமாக ஸ்பெக்ட்ரம் சர்ச்சை (ஊழல் அல்லவாம் சர்ச்சையாம்) என்று பிரச்சாரக் கையேட்டை அடித்து வினியோகிக்க ஆரம்பித்தார். ஒட்டு மொத்த இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சோனியாவையும், ராஜாவையும், கருணாநிதியையும், கனிமொழியையும் நமக்குத் தெரியும் அவர்கள் இதைத்தான் செய்வார்கள். அவர்களுக்கு எந்த விதமான மனசாட்சியோ அடிப்படை அறவுணர்வோ கிடையாது. ஆனால் உண்மையிலேயே நம்பிக்கைத் துரோகம் செய்தவர்கள் தங்கள் அறிவை வைத்து விபச்சாரம் செய்த அறிவுச் சோரம் போன இந்த மெத்தப் படித்த மேதாவிகளேயாவார்கள். இவர்களே இந்த சீரியலின் அதிர்ச்சிகரமான நடிப்பை அளித்த பாத்திரங்களாவார்கள். படித்தவன் சூது செய்தால் ஐயோ என்று போவான் என்று பேசுவதெல்லாம் சும்மா கதை. அதெல்லாம் என்றுமே நடந்ததேயில்லை. படித்தவன் சூது செய்தால் அமோகமாக வாழ்வான் என்பதே நிதர்சனம்.


மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்கும் தருணமே அந்த ஜனநாயகத்துக்கு அடிக்கப் படும் சாவு மணியாக இருக்கும். அந்த இறுதிக் கட்ட யாத்திரையை நோக்கித்தான் இந்திய ஜனநாயகம் என்று வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் அனைத்துத் தூண்களுமே இன்று செல்லரித்துப் போய், கரையான்களுக்கு உணவாகி, அழுகி துர்நாற்றம் எடுத்து ஜனநாயகத்தின் மீதும் அடிப்படை அறவுணர்வுகளின் மீதும் நம்பிக்கைக் கொண்டிருந்த குடிமகனின் நம்பிக்கையை அறவே இழந்து விட்டதுதான் இத்தனை ஆண்டுகால காங்கிரஸ் அரசின் மகத்தான சாதனையாகும்.

மக்கள் வாகெடுத்து நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த மன்மோகன் சிங் அரசு ஊழல்களின் ஊற்றுக் கண்ணாகி விட்டது.

ஜனநாயகத்தின் மற்றொரு தூணும் மக்கள் கொஞ்சமாவது நம்பிக்கை வைத்திருந்த நீதி அமைப்பு கே ஜி பாலகிருஷ்ணன் போன்ற புல்லுருவிகளாலும் அயோக்யர்களாலும் விலை போய் விட்டது

ராஜ்தீப் சர்தேசாய், பர்க்கா தத், வீர் சங்வி போன்ற பத்திரிகை உலக [ edited ] ஊடகம் என்னும் மற்றொரு தூணும் உளுத்துப் போய் விட்டது.

சி வி சி தாமஸ், சந்தோலியா போன்ற ஐ ஏ எஸ் அதிகாரிகள் முதல் தாலுகா ஆபீஸ் ப்யூன்கள் வரை ஒட்டு மொத்த அதிகார வர்க்கமெனும் தூணும் அழுகி நாறுகிறது.

இத்தகைய மோசமான கையறு நிலையில் நாம் வாழ்வை வெறுத்து செத்துப் போய் விட முடியாது. நம்மிடம் கடைசி சக்தி இருக்கும் வரை அராஜகங்களை எதிர்த்துப் போராடிப் பார்த்தே தீர வேண்டும், இது நமது அடிப்படை இருப்பு சார்ந்த பிரச்சினை. நம்மால் செய்யக் கூடியதெல்லாம் நம்மிடம் இருக்கும் ஒரே ஒரு வாக்கையும் பொறுப்புடன் பயன்படுத்துவதுடன் எப்பொழுதும் விழிப்புடன் இருப்பதுமே ஆகும்.

நம் அனைவரிடமும் ஓட்டுரிமை என்னும் சக்திவாய்ந்த ஒரு ஆயுதம் இருக்கிறது, அதைப் பயன்படுத்தி இந்தக் கொள்ளைக்காரர்களைப் பூண்டோடு ஒழிக்க உறுதி பூணுவோம். இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் அதற்கு ஒரு ஊக்கியாக விழிப்பூட்டும் நிகழ்வாக இருக்கட்டும். இந்தக் கெடுதியில் இருந்தும் கூட ஒரு நன்மை மலரட்டும்.

இன்று இந்தியாவுக்கு ஆண்டிமுத்து ராஜா ஏற்படுத்தியுள்ள இழப்பு லட்சம் கோடி ரூபாய்களாக இருக்கலாம். ஆனால் அதை விட மோசமான நம்பிக்கை இழப்பை நாம் மன்மோகன்,கபில் சிபல், மற்றும் படித்த மேதாவிகளிடம் இழந்திருக்கிறோம் அதுவே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அழிவுக் கொள்ளையர்களை இந்த அறிவுக் கொள்ளையர்களின் கேவலமான செயல்கள் மன்னிக்கவே முடியாதவை. கொள்ளை போன இந்த ஸ்பெக்ட்ரம் பணம் “நம் ஒவ்வொருவரது உழைப்பின் பயன்” என்பதை அறிவோம். நம் வீட்டுச் சொத்து கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது அவசியம். கொள்ளையர்களை இனம் கண்டு தண்டிப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.

பாடுபட்டு வெள்ளையர்களிடமிருந்து நாம் பெற்ற சுதந்திரம் இன்று கொள்ளையர்கள் கைகளில் சிக்கிச் சீரழிகின்றது. நம் தேசத்தின் வளங்கள் அனைத்தும் சூறையாடப் படுகின்றன. இயற்கை வளங்களிலும், பொருளாதாரத்திலும், தார்மீக கோட்பாடுகளிலும், நேர்மை நீதி நியாயங்களிலும், அறவுணர்வுகளிலும் திவாலாகிப் போன ஒரு தேசத்தையா உங்களது குழந்தைகளுக்கு விட்டு விட்டுப் போகப் போகிறீர்கள்? சிந்தியுங்கள் நண்பர்களே நம் கடமைகளை உணருங்கள் செயல்படுங்கள்.

ஆகா முருகா