ஹாய் இட்லி வடை ரசிகர்களுக்கு ஆஹா முருகா! எழுதிக்கொள்வது பாடு பட்டு நானும் ஒரு இட்லி வடை ரெடி பண்ணிருக்கேன் இதையும் சுவைத்து பார்த்துவிட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.இது என்றைக்கும் மனிதர்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லும் ஒரு தளமாக அமையும் என்பதை உறுதியுடன் சொல்லிக்கொள்கிறேன்.என்றும் அன்புடன் உங்கள் ஆகா முருகா!

Monday, November 15, 2010

மண்டேனா ஒன்று -போலியதானே நம்புறீங்க தமிழ் உடன்பிறப்புகளே அதனாலதான்

ஒவ்வொரு தீபாவளி தினத்தன்றும், தினசரிகள், ஆட்சியிலிருக்கும் தலைவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்திகளைப் பிரசுரிக்கும். இந்த தீபாவளிக்கும், இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் சோனியா காந்தி, மற்றும் ஜெயலலிதா உட்பட தமிழகத்தின் பல அரசியல் தலைவர்கள் மக்களுக்கு "இத்தினத்தில் மக்களது வாழ்வில் ஒளி பிறக்கட்டும்" என்ற ரீதியில் வாழ்த்துச் செய்திகளை விடுத்திருந்தனர்.

இந்த மரபை குறிப்பிடத்தகுந்த அளவில் தவிர்த்தவர் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள். பெரியார் ஈ.வே.ராமசாமியால் போஷிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பகுத்தறிவாளர் என்று தம்மைப் பறைசாற்றிக் கொள்ளும் இவர், கடவுளரும், சாத்தானும் தொடர்புடைய தீபாவளிக்கு வாழ்த்துக் கூறுவதைத் தவிர்த்தது சித்தாந்த ரீதியாக அவரைப் பொறுத்தவரை மிகவும் சரியானதே. ஆனால் கருணாநிதி ஒரு சந்தர்ப்பவாத பகுத்தறிவாளர். ரமலான், கிறிஸ்த்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு அவர் வாழ்த்துக்கள் வெளியிடுவதிலிருந்து தவறுவதே இல்லை.

இஸ்லாமியர்கள் அணியும் தலைக் குல்லாயை அணிந்து, இஃப்தார் விருந்துகளில் கலந்து கொள்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவரது மகளும், கவிஞரும், நாத்திகம் மற்றும் பெண்ணியம் போன்றவற்றின் மீது புரட்சிகர சிந்தனைகளை உடையவருமான கனிமொழி ஒரு இஃப்தார் விருந்தில், தலையை முழுவதும் மறைக்கும் விதமான பாரம்பரிய உடையுடன் கலந்து கொண்டார்.

ஆனால் கருணாநிதியின் சந்தர்ப்பவாத பகுத்தறிவுவாதம், அவருடைய குருநாதர் பெரியாரைப் போலல்லாமல் ஹிந்து மத நம்பிக்கைகளை மட்டுமே சாடும் தன்மையை உடையது. ஒருமுறை கருணாநிதி தம்முடைய கட்சி சகா ஆதி ராஜாராம் நெற்றித் திலகம் அணிந்ததற்காக அவரைக் கடிந்து கொண்டதோடு, அது ரத்தம் வடிவது போலுள்ளது எனவும் கேலி செய்தார். தவிர கூட்டணியில் இல்லாத வேளைகளில் கருணாநிதி அறிவிக்கப்பட்ட ஹிந்துத்துவக் கட்சியான பாஜகவை பண்டாரப் பரதேசிகள் என்றும் வர்ணிப்பார்.

ஆனால் அவருடைய குடும்பம் எப்போதும் அவருடைய பகுத்தறிவுப் பிரசாரங்களிலிருந்து விலகியே நிற்கிறது. அவருடைய குடும்ப உறுப்பினர்களில் சிலர் மத நம்பிக்கையுடையவர்கள். அவருடைய மருமகளும், மு.க.ஸ்டாலினினுடைய மனைவியுமான துர்கா, ஒருமுறை தன்னுடைய சேகரிப்பில் இருக்கும் விநாயகர் விக்ரகங்களை ஒரு பிரபல தமிழ் பத்திரிகைக்கு பெருமிதத்துடன் காட்சிப்படுத்தினார். சில மாதங்களுக்கு முன்பு, மைலாப்பூரில் உள்ள முண்டக்கண்ணியம்மன் கோவிலில் ஒரு புதிய உணவு அரங்கத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார். கருணாநிதியின் பேத்தியான எழிலரசி அவரது மகள் செல்வியின் மூலமாக ஒரு கோவில் கட்டுவதற்காக ரூபாய் பதிமூன்று லட்சத்தை சமீபத்தில் நன்கொடையாக அளித்தார். கருணாநிதியின் அதிகாரப்பூர்வ மனைவியான தாயாளு அம்மாள், புட்டப்பர்த்தி சாய்பாபாவின் பக்தை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும் அரசாங்க விழா ஒன்றை நடத்தும் பாவனையில், சாய்பாபா சென்னைக்குத் தருவிக்கப்பட்டு, சாய்பாபா கருணாநிதியின் இல்லத்திற்கு தனிப்பட்ட வருகை தந்ததோடு மட்டுமல்லாமல், தயாளு அம்மாள் சாய்பாபாவின் கால்களில் வீழ்ந்து வணங்கினார்.

கருணாநிதியினுடைய அக்காள் பேரன் கலாநிதி மாறன், மற்றும் பேரன்களான உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி ஆகியோர் படத் தயாரிப்பில் மும்முரமாக இருக்கின்றனர். இவர்களுடைய படங்கள் அனைத்துமே பிராமண பூஜாரிகளின் பூஜைக்குப் பிறகே துவங்கப்படுகின்றன.

ஒட்டுமொத்த குடும்பமுமே இறை நம்பிக்கையாளர்கள் என்ற பட்சத்தில் கருணாநிதி மற்றும் தனித்து நிற்கிறாரா? அப்படித் தெரிந்தாலும், அதுவல்ல நிஜம். கருணாநிதியும் அவருடைய மூட நம்பிக்கைகளுக்குப் பெயர் பெற்றவர்தான். சில வருடங்களாக அவர் அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் மஞ்சள் துண்டு - அவருடைய நன்மையை முன்னிட்டு அவருடைய குடும்ப ஜோதிடர்களால் அறிவுறுத்தப்பட்ட நிறம் என்று பரவலாக அடிபடுகிறது. மிக சமீபத்தில் தஞ்சை கோவிலின் ஆயிரமாவது ஆண்டுவிழாவை முன்னிட்டு அதற்கு வருகை தந்த கருணாநிதி பிரதான நுழைவு வாயிலைத் தவிர்த்து பக்கவாட்டு நுழைவு வாயிலின் மூலமாகவே கோவிலை அடைந்தார். கோவிலின் பிரதான நுழைவு வாயிலின் மூலமாக வருகை தரும் அரசியல் தலைவர்களது அரசியல் வாழ்வு வீழ்ச்சி பெறும் என்ற நம்பிக்கையை முன்னிட்டே இம்முடிவு. தவிர, தீய சக்திகளின் திருஷ்டியிலிருந்து தப்புவதற்காக, பட்டுசட்டை, வேஷ்டி, அங்கவஸ்திரம் அணிந்தார்.

கருணாநிதி அரசாங்க கட்டிடங்களையும், திட்டங்களையும் கூட அத்திட்டப் பணிகள் முடிவடைவதற்கு முன்பாகவே சுப தினங்களில் திறந்து வைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகக் கட்டிடம், முழுமையான கட்டுமானப் பணிகள் முடிவடைவதற்கும் முன்பாகவே பல் கோடி ரூபாய் செலவிலான சினிமா செட்டிங்குகளில் பயன்படுத்தப்படக் கூடிய போலியான மேற்கூரையுடன் மிகுந்த துரித கதியில் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் நான்கு மாதங்களுக்குப் பிறகும், தலைமைச் செயலகம் பழைய கட்டிடத்திலிருந்தே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கோட்டூர்புரம் நூலகமும் பணிகள் முடிவடைவதற்கு முன்னதாகவே திறந்து வைக்கப்பட்டது.

இருந்தாலும், கருணாநிதி தீபாவளி வாழ்த்துக் கூறுவதிலிருந்து சற்று தள்ளியே இருக்கிறார். அவரைப் பொருத்தவரை தீபாவளி கொண்டாட்டம் என்பது திராவிட தீய சக்திகளுக்கு எதிரான ஆரியக் கடவுளரின் வெற்றி என்று கருதப்படுகிறது. ஆனால் குறிப்பிடத்தகுந்த தமிழ் எழுத்தாளரான ஜெயமோகனைப் பொருத்தவரை, தீபாவளி என்பது திராவிடர்கள் (திசம்பர் மாதத்தில்) கொண்டாடும் கார்த்திகை தீபத்திருநாளின் மூலமே என்றும், பிறகு புத்தர்களால் அது வடவர்களின் பண்டிகையாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார்.

முதல்வரின் சந்தர்ப்பவாத பகுத்தறிவுவாதம் ஒருபுறமிருக்க, அவருடைய குடும்பத் தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சி தீபாவளி கொண்டாடக் கூச்சப்படவில்லை. விளம்பரதாரர்கள் மூலமாகக் கிடைக்கும் கணிசமான தொகையை முன்னிட்டு, மூன்று நாட்களுக்கு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

இப்பொழுதாவது கருணாநிதி தனது சந்தர்ப்பவாத பகுத்தறிவுவாதத்தை விட்டொழித்து, அனைத்து மதத்தவரின் பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும், அல்லது அவருடைய குருநாதர் பெரியாரைப் போல அனைத்து மத நிகழ்ச்சிகளிலிருந்தும் தள்ளியிருக்க வேண்டும். ஆனால் இவை நடக்கமலேயே போகலாம்....இப்பொழுது துவங்கியே சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான சுப தினங்கள் கணிக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment